கல்லுரி பெண் மரணம்.! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்…

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தால் தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்து வந்தார். அது மட்டுமல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் போது கால்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார்.

சமீபத்தில் பயிற்சியின்போது அந்த மாணவிக்கு கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அந்த மாணவியை சேர்த்து உள்ளனர். அப்போது அந்த மாணவிக்கு காலில் தசை பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரைப்படி  தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த மாணவி சிகிச்சை அளித்து வந்த நிலையில் தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் அந்த மாணவி பிரியாவுக்கு கால் வலி குறையவில்லை என்று கூறப்படுகிறது இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசோதனையில் காலில் தசைகள் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பதை தெரியவந்துள்ளது. இதனால் பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி மருத்துவர்கள் பிரியாவின் காலை அகற்றினர். அதன் பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. மேலும் அந்த அரசு மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிவாரணமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் உயிரை இழந்த மாணவி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்ற போது அங்கிருந்த பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Comment