சென்னை ஏரியாவில் வசூல் வேட்டை – 30 நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

உலகநாயகன் கமலஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு பிறகு கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கம் போகாமல் இருந்தார். ஆனால் லோகேஷ் கனகராஜ் வான்டட்டாக  போய் விக்ரம் படத்தின் கதையை கமலுக்கு கூற அவருக்கு ரொம்ப பிடித்து போகவே உடனடியாக இந்த படத்தை தயாரித்து, நடிக்கவும் செய்தார்.

விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி நரேன், ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் கதைக்கு ஏற்றவாறு சூப்பராக நடித்திருந்தனர் படம் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்து கண்டுகளித்து வருகின்றனர். இதுவரை 5 வாரங்களை தொட்ட நிலையிலும் இந்த படத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படம் உலக அளவில் வரை தற்பொழுது மட்டுமே சுமார் 410 கோடைக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் 170 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது விக்ரம் திரைப்படம் 30 நாள் முடிவில் சென்னை ஏரியாவில் மட்டும்.

இதுவரை  16. 28 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் ஓடி கொண்டு இருப்பதால் இன்னும் சில கோடிகளை அள்ளி சாதனை படைக்கும் என தெரிய வருகிறது இதனால் விக்ரம் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.

Leave a Comment