வெளியாவதற்கு முன்பே இவ்வளவு வசூலா.? அமைதியாக வேட்டையாடும் சூர்யா 42 திரைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து கெட்டப்புகளில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் அடுத்து அடுத்து டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வரும் சூர்யா 42 திரைப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் திடீரென தற்போது ஒரு தகவல் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதாவது சூரியா 42 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது சூர்யா 42 திரைப்படத்தின் OTT உரிமம் பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டும் அல்லாமல் OTT-யில் அதிக தொகை கொடுத்து வாங்கிய தமிழ் திரைப்படங்களில் சூர்யா 42 திரைப்படம் இரண்டாவது இடம் பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இத்தனை நாட்களாக எந்த ஒரு தகவலும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கிபடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் டைட்டிலை படகுழு எப்போது வெளியிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் முடிந்ததும் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்தும் தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment