அழகில் மயக்கும் கிளியோபட்ரா.! அவரின் அழகின் ரகசியத்திற்கு தமிழர்கள் பயன்படுத்தும் இந்த இயற்கை பொருள் தானாம்.!

உலகம் முழுவதும் அழகு என்று சொன்னால் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கிளியோபட்ரா தான் இவர் எகிப்து ராணி அவர். வரலாறுகளில் பல ராணிகள் பல அழகான பெண்கள் வாழ்ந்திருந்தாலும் கிளியோபட்ராவின் அழகு தனித்துவம் வாய்ந்தது,. இவரின் அழகிற்கு பல சர்ச்சைகளும் இருக்கிறது இந்த நிலையில் அவரின் அதிர்ஷ்டவசமாக அவரின் அழகு ரகசியங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் விரும்புவது கிளியோபட்ரா போல அழகாக இருக்கவேண்டும் என்பதுதான், அப்படி இருக்கும் வகையில் இந்த அழகின் ரகசியம் கண்டிப்பாக பலருக்கு உதவியாக இருக்கும் இந்த அழகுக் குறிப்புகளை ஒரு காலத்தில் தமிழர்களும் பயன்படுத்தியுள்ளார்கள்.

பால் மற்றும் தேன் குளியல்

கிளியோபாட்ரா மிகவும் அழகாக இருப்பதற்கு பால் மற்றும் தேன் குளியல் சடங்கை பின்பற்றியுள்ளார் இந்த இரண்டும் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் நச்சுக்களை வெளியேற்றி மேலும் சருமத்தை புதிதாகவும் இனிமையாகவும் வைத்திருக்கும். குளியல் நீரில் 2 கப் பால் மற்றும் அரை கப் தேன் சேர்த்து உங்கள் சருமத்தை கிளியோபட்ரா போல் அழகாக மாற்றுங்கள்.

கல் உப்பு ஸ்கிராப்

மேலும் கிளியோபட்ராவின் அழகிற்கு ஊழியர்கள் கல் உப்பால் செய்யப்பட்ட தடிமனான ஸ்க்ராப்பால் உடல் முழுவதும் மசாஜ் செய்வார்கள், இந்த கலவையை உங்கள் உடல் முழுவதும் தேய்த்தால் இறந்த சருமத்தை நீக்கி உங்கள் சருமம் புதியதாக மாறும். மூன்று தேக்கரண்டி தடிமனான கிரீம் உடன் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து உங்கள் சொந்த கலவையை உருவாக்கலாம் இதை பால் குளியலுக்கு பிறகு பயன்படுத்தவும்.

பாதாம் எண்ணெய்

கிளியோபாட்ரா தனது தோள்களை பராமரிக்க ஒரு பகுதியாக பாதாம் எண்ணையை பயன்படுத்தியுள்ளார், பாதாம் எண்ணெய் மாண்டலின் அமிலம் இருப்பதால் இது அழகுசாதன முன்னோடி பொருளாக விளங்குகிறது.

ஓட்ஸ்  சுத்தகரிப்பு

அழகி கிளியோபாட்ரா தனது தோலை சுத்தப்படுத்தவும் வெளியேற்றவும் ஓட்ஸ் பயன்படுத்த விரும்பினார், என்னதான் பல நவீன சோப்புகள் தோல்களில் பயன்படுத்தினாலும் ஓட்ஸ்  ஈரப்பதமூட்டும் ஊட்டமளிக்கும் குணமுடையது. அதனால் உங்கள் குளியல் நீரில் சிறிது ஓட்ஸ் சேர்க்கவும், அல்லது சுடுநீரில் சிறிது ஓட்ஸ் சேர்த்து மசாஜ் செய்யவும்.

Leave a Comment