சினிமாவுல இப்பதான் காலடி எடுத்து வச்ச மாதிரி இருக்கு.! அதுக்குள்ள இவ்வளவு கோடி சம்பாரித்து விட்டாரா.? நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், ஒருசில சீரியலில் தலைகாட்டும் வந்த சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட் வெள்ளித்திரையில் இவர்  குறைந்த பட்ஜெட்படமான மெரினா படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

முதல் படமே இவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தால் சிவகார்த்திகேயனை நம்பி அடுத்த திரைப்படத்தை தயாரிக்க தொடங்கினார் நடிகர் தனுஷ். இந்தப் படங்கள் ஓரளவு பட்ஜெட் படம் என்பதால் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.

இதில் தனுசும் சிவகார்த்திகேயனும் நல்ல காசை பார்த்தாலும் ஒரு கட்டத்தில் தனுஷை விட அதிக படங்களை கைப்பற்றியதோடு தனுஷை ஓவர்டேக் செய்தார் மேலும் சம்பள விஷயத்திலும் முன்னேறினார். இது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியதால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

சிவகார்த்திகேயனின் அசிஸ்டன்ட் மேனேஜராக இருந்த ஆர். டி இராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில்  சிவகார்த்தியன் படங்களை தயாரித்ததால் அந்த திரைப் படங்களும் வெளிவந்து சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பிறகு சம்பளத்தை உயர்த்திக் கொண்டார் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படங்களுக்கு சுமார் 22 கோடி சம்பளம் வாங்குகிறார் தனுஷை விட தற்போது அதிக சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தனுஷ் திரைப்படங்களுக்கு கூட அவ்வளவு பெரிய மாஸ் ஓபனிங் இருக்காது சிவகார்த்திகேயன் வெகுவிரைவிலேயே தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வளர்ந்துள்ளதால் அவருக்கென ஒரு கூட்டம் சிறப்பாக செயல்படுகிறது மேலும் தனுஷ் படத்தை விட வசூலில் சிவகார்த்திகேயன் படம் முன்னேறி உள்ளது தியேட்டர் உரிமையாளர்களும் அஜித் விஜய் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக  சிவகார்த்திகேயன் படங்கள் பெரிய மாஸ் ஓபனிங் இருக்கிறது.

சினிமாவில் வந்து எட்டு வருடங்கள் ஆகிய சிவகார்த்திகேயன் இதுவரை 150 கோடி அல்லது  125 கோடி வரை வைத்திருப்பதாக தகவல்கள் கசிக்கின்றன. இவர் தற்போது நடித்துள்ள டாக்டர் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டால் மேலும் சில கோடிகளை உயர்த்தி அதிக சம்பளம் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment