நடிகர் அஜித் சினிமா பிரபலங்களை ஒதுக்கி வைத்து பார்க்க இதுதான் காரணம்.? ரகசியத்தை உடைக்கும் எம் எஸ் பாஸ்கர்.

தமிழ் சினிமா உலகில் இன்று வெற்றி நடிகராக வருவர் நடிகர் அஜித் குமார். இவர் சமீப காலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டியது.

அதனால் படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு  மட்டுமில்லாமல் 230 கோடிக்கு மேல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை மகிழ் திருமேனி பிரமாண்டமாக இயக்க உள்ளார்.  என்ற தகவல்கள் வெளியாகி என இருந்தாலும்..

ஷூட்டிங் எப்பொழுது என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.. அஜித்தும் தற்போது பைக் ரெய்டு மூலம் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வருகிறார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வெளி வந்தன இப்படி இருந்தாலும் மறுபக்கம் அஜித் தன்னுடன் நடிக்கும், நடிகர், நடிகைகளுக்கு அதிகமாக சிபாரிசு செய்ய மாட்டார்.

மேலும் தான் படங்களில் நடிப்பதோடு சரி தன் படத்தின் பிரமோஷன்னுக்கு கூட இறங்கி வர மாட்டார். யாரிடமும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பேச மாட்டார்கள் இப்படிப்பட்ட குணம் அஜித்திற்கு இருக்கிறது இந்த நிலையில்  பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கர் அஜித் பற்றி பேசியது வைரலாகி வருகிறது அஜித், விஜய் பொதுவாக அதிகமாக பேச மாட்டார்கள்.

அப்படி பேசினால் தலையில் ஏறி உட்கார்ந்து விடுவார்கள் பிறகு எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்கன்னு கேட்பாங்க.. எதுக்கு இதெல்லாம்.. அதனால் தான் மற்றவர்களிடம் பேசுவதை குறைத்து கொள்கிறார்கள். கூறினார் இந்த தகவல் தற்போது அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment