மறைந்த சித்ரா பற்றி முதன்முறையாக ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத்.! அப்போ இந்த விஷயம் யாருக்குமே தெரியாதா..! அதிர்ச்சியான ரசிகர்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து அனிதா சம்பத் தன்னுடைய சமூக வளைதளத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர்தான் அணித சம்பத் இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர், மேலும் வெள்ளித்திரையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய காப்பான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்,  பிக்பாஸ் நடிப்பதற்கு முன்பே இவரது சமூக வளைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவர்களின் ரசிகர்கள் அனிதா சம்பத்தை மிகவும் வரவேற்றார்கள், ஆரம்பகாலத்தில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் போகப்போக பலரும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இவரின் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி அவரை பெரிதாக பாதித்தது. இந்த நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு அனிதா சம்பத் ரசிகர்கள் அனுப்பியிருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர் மறைந்த நடிகை சித்ராவின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் வீட்டிற்கு வந்தவுடன் அந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஆனால் அவரை நேரில் பார்த்தது கிடையாது அவரின் இறப்பு பற்றி கேட்டதும் மனமுடைந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது எனக் கூறினார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் யாருக்குமே தெரியாது என்பது போல தான் தெரிகிறது இவர் கூறிய பதில்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா கதிர் ஜோடி தான் மக்களை வெகுவாக கவர்ந்தது, அதேபோல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் கதிர் முல்லை தான், இந்த சீரியலில் கதிராக குமரனும் முல்லையாக சித்ராவும் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் சித்ரா மறைவிற்குப் பின்பு முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா புதிய முல்லையாக நடித்து வருகிறார்.

மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருவதால் இன்னும் சிறிது காலத்தில் எந்த அளவு மக்களை கவரும் என்பது தெரிந்துவிடும்.

anitha
anitha

Leave a Comment