இதை காண இப்பொழுது சித்ரா உயிரோடு இல்லையே.! அவரின் பெற்றோருக்கு கிடைத்த சின்ன ஆறுதல்.!

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.

இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைையுலகினர்களையும் சித்ராவின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் கணவர் ஹேமந்த் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.

ஹேமந்த் சித்ராவை கொடுமை படுத்தியும் உடலில் கீரியும் அடித்து துன்புறுத்தியும் வார்த்தையால் கண்டபடி பேசியும் மிகவும் துன்புறுத்தியுள்ளார்.

எனவே ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் நாளை ஆடியோ லான்ச் நாளை நடைபெற உள்ளது. கால்ஸ் திரைப்படத்தின் இசை தொகுப்பை சித்ராவின் பெற்றோர் வெளியிட உள்ளதாகவும் மற்றும் படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐபிஎஸ், சீவி திலகவதி, சின்மயி போன்ற சிங்கப்பெண்கள் வெளியிட உள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்தது.

சித்ராவின் பெற்றோர் வருத்தத்தில்  இருந்தாலும் இது சித்ராவின் பெற்றோர்களுக்கு ஆறுதலாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் ட்ரைலர்காக சித்ராவின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

chitra-vj

Leave a Comment

Exit mobile version