மீடியா என்றால் இப்படிதான் சித்ராவின் மறைவுக்குப்பின் வேதனையை வெளியிட்ட மைனா நந்தினி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் சித்ரா இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களுக்கும் சித்ராவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சித்ரா நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று உள்ளார் அங்கு அதிகாலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் தங்கியிருந்த ஹேம்நாத் அவர்கள் தெரிவித்தார்.  சித்ராவின் மரணச் செய்தியைக் கேட்டு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து பேட்டி கொடுத்த மைனா நந்தினி சித்ராவின் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை கிடையாது என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது எனவும் அவர் தற்கொலையில் ஏதோ மர்மம் இருக்கிறது எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் போலீசார் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவர் கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் அம்மா கொடுத்த மன அழுத்தமே காரணம் எனவும் கூறுகிறார்கள்,  இந்த நிலையில் சித்ராவின் தற்கொலையில் பல விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில் நடிகை மைனா நந்தினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது மீடியா என்றால் இப்படி தான் எதற்கு இந்த வாக்கியம் இந்த தேவையில்லாத குற்றச்சாட்டை தயவு செய்து நிறுத்துங்கள் ஒருவரது தொழிலை வைத்து அவரை எடைபோட வேண்டாம் ஒரு மனிதனாக மனிதனை மதியுங்கள் மன அழுத்தம் மனச்சோர்வு எல்லாம் மீடியாவில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை கிடையாது இது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு விஷயம்தான் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட வழி போராட்டங்கள், அழுத்தங்கள் இருக்கும்.

nandhini
nandhini

அதனால் ஒருவர் தொழிலை வைத்து மட்டும் அவர்களை காயப்படுத்தாதீர்கள் அவர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இந்த சமூகத்தில் இருக்கும் வார்த்தைகளை நம்பி ஒருவரைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள் #stopjudging #stopkillingdreams என வேதனையோடு தனது பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment