மறைந்த சித்ராவிற்காக அதிரடியாக வாதாடிய வக்கீல்.! ஜாமீனில் வெளியே வராமல் சிக்கி தவிக்கும் ஹேமந்த்

சித்ராவின் கணவன் ஹேமந்த் சிறையிலிருந்து ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அதிரடியாக மறுத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்

இவரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியாத பலரும் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை இவர் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என பலரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான முக்கிய காரணம் ஹேமந்த் மற்றும் சித்ராவின் அம்மா கொடுத்த அழுத்தம் தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் அதிரடியாக கைது செய்து இன்னும் விசாரணை நடத்தி வருகிறார்கள்,கடந்த 14ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் இன்னும் வெளியே வராமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமந்த் தரப்பில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்கள்.

இந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் குமார் ஸ்ரீபெரம்பத்தூர் கோட்டாட்சியர் விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் சித்ராவின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் கெடுக்கும் வகையில் ஹேமந்த் தரப்பிலிருந்து செயல்படுவதாக கூறி ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சித்ரா தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது..

Leave a Comment