சித்ராவின் மரணத்தில் புதிய திருப்பம்.? மூன்றாவதாக சிக்கிய முக்கிய பிரபலம்.?

தொலைக் காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் சீரியலில் அதிக போட்டி இருப்பது சகஜம்தான். இந்த நிலையில் டிஆர்பி யில் முதல் இடத்தைப் பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகளும் புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள்.

அப்படிதான் விஜய் தொலைக்காட்சியும் படத்தின் பெயரில் புதிதாக சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள், மேலும் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் மிகவும் பிரபலமடைந்தது இந்த சீரியலை காண ரசிகர்கள் டிவி முன்பு அமர்ந்து இருப்பார்கள்.

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சித்ரா, இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆனால் திடீரென கடந்த 9ஆம் தேதி டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டு அவரது ரசிகர்களுக்கும் உடன் பணியாற்றிய நபர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்..

மேலும் இவ்வாறு மரணத்தில் பலரும் சந்தேகம் இருப்பதாக கூறினார்கள் ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையின் பேரில் தான் ஹேமந்த் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பொழுது வருங்கால கணவர் உடன் இருந்துள்ளார்.  அதனால் அவர்களிடம் துருவித் துருவி விசாரித்த போலீஸ். விசாரணையில் ஹேமந்த் போலீசரிடம் முறையான தகவலை கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் முதலில் சித்ரா குளிக்க சென்றார் நான் வெளியே சென்றேன் என கூறியிருந்தார்.  ஆனால் தற்பொழுது ஒரு டாகுமெண்ட் எடுப்பதற்காகதான் வெளியே சென்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஹேமந்த் மாற்றி மாற்றி பேசியதால் போலீசாருக்கும் இடையே மேலும் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹேமந்த் வெளியே சென்ற பொழுது வேறு ஒருவர் கொலை செய்திருக்கலாம் என்ற நோக்கத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் அந்த மூணாவது நபர் சித்ராவின் நண்பர்களாக அல்லது அரசியல் புள்ளிகளாகவோ இருக்கலாம் என பல கோணங்களில் தேடி வருகிறார்கள். மேலும் மூன்றாவது நபர் யார் சம்பந்தப்பட்ட இருக்கலாம் எனவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment