சித்ரா தற்கொலையில் திடீர் திருப்பம்.! வருங்கால கணவர் ஹேம்நாத் கைது.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சித்ரா என்றால் பலருக்கு தெரியுமோ தெரியாதோ.? ஆனால் முல்லை என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர்.

குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மேலும் மேலும் பிரபலமடைந்தார், சொல்லப்போனால் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் இவரை பலருக்கு மிகவும் பிடித்துவிட்டது,  ஆனால் தற்பொழுது முல்லை உயிரோடு கிடையாது.

இவர் கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பொழுது தற்கொலை செய்து கொண்டார், அதிகாலையில் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் சித்ராவின் வருங்கால கணவரை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி உள்ளார்கள் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரா திருவான்மியூரில் வீடு கட்டுவதற்காகவும் சொகுசு கார் வாங்குவதற்காகவும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார் சித்ரா அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டும் என நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

கடனுடன் குடும்ப நெருக்கடி செலவுகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்த சித்ரா ஒரு சூழ்நிலையில் ஹேமந்த் மற்றும் சித்ராவுக்கு பதிவு திருமணம் நடைபெற்றது.  குடும்ப செலவுகளை மொத்தமாக பார்த்துக்கொண்ட சித்ராவை ஹேம்நாத் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு விருப்பமில்லை.

இருந்தாலும் திருமணம் கலை கட்டியது, பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடத்தினார்கள், அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு ஹேம்நாத் அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை அதனால் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தார் சித்ரா.

பின்பு ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக சித்ரா நடித்து வந்தது பிடிக்காமல் ஹேமநாதன் இனி நடிக்க வேண்டாம் என சித்ராவிடம் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் எதைப் பார்த்தாலும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்து சண்டை போட்டு வந்துள்ளார் அதனால் ஒரு முறை சித்ரா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி மீண்டும் சித்ரா மற்றும் ஹேம்நாத் அவர்களுக்கு விடுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது, மேலும் படப்பிடிப்பில் எந்த நடிகருடன் நடனமாடினாய் நீ எனக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் ஹேம்நாத். இதனால் மனம் உடைந்த சித்ரா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது எனகூறியுள்ளார்.

சித்ராவின் காதலை புரிந்து கொள்ளாத ஹேம்நாத் செத்துத் தொலை என வெறுப்பாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, சித்ராவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹேம்நாத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment