ஆசைஆசையாக செல்பி எடுத்துக்கொண்ட மறைந்த சித்ரா.. யாருடன் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

விஜே சித்ரா நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார், இது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடம் சினிமா பிரபலங்கள் இடமும் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது, ஏனென்றால் இவர் நடிப்புக்காகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்தார்கள் அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் இறந்து விட்டதால் ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள் அதன் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.  விஜே சித்ரா சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் விஜே சித்ரா மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இருவருமே மறைந்து விட்டார்கள் என்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ரசிகர்களுக்குப் பிடித்த இருவருமே இறந்து விட்டதால் கண்ணீருடன் ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரம் போய் விட்டீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sbb

Leave a Comment

Exit mobile version