மகளின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சித்ராவுக்கு வைக்கப்பட்ட ice பாக்ஸில் படுத்துக் கொண்ட கதறிய தந்தை.! நெஞ்சை பதற வைக்கும் காட்சி

சமூக வலைத்தளம் முழுவதும் நேற்று சித்ராவின் மரணச்செய்தி தான் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம்,அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் மட்டும் இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்தவர்தான் சித்ரா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.

இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய வருங்கால கணவருடன் தங்கியுள்ளார் அப்பொழுது குளிக்க போவதாக கூறிவிட்டு வருங்கால கணவரை வெளியே அனுப்பிவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் வெளியே வராத சித்ரா மீது சந்தேகம் ஏற்பட்டதால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தால் சித்ரா சடலமாக கிடந்துள்ளார்.

அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி சித்ராவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். சித்ராவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

சித்ராவின் உடலை வைப்பதற்காக வீட்டிற்கு ஐஸ் பாக்ஸ் வந்துள்ளது. சித்ராவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத அவரது தந்தை அந்த ஐஸ் பாக்ஸில் படுத்துக்கொண்டு கதறி அழுதுள்ளார்,  அப்பொழுது அங்கு உடன் இருந்தவர்கள் அவரை தூக்கி தனியே உட்கார வைக்கிறார்கள்.

chithra
chithra

இந்த காட்சி பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. சித்ராவின் அம்மா வீட்டு வாசலிலேயே கதறி கதறி அழுது கொண்டிருந்தார்.

Leave a Comment