அதிரடியாக களம் இறங்கப் போகும் சென்னை 28 மூன்றாம் பாகம்.!! வெங்கட்பிரபு அறிவிப்பு.

Chennai 28 third part Announcement of Venkatprabhu: பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு  நடிகர், திரைப்பட இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா போன்ற பல வெற்றிப் படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்துள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் நடிகராக ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், சிவகாசி, சரோஜா, கோவா, ஞாபகம் வருதே, வசந்தம் வந்தாச்சு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனைத்தொடர்ந்து வெற்றிபெறும் திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகம் எடுப்பது என்பது தற்போது உள்ள ட்ரெண்டிங். அந்த வகையில் தமிழில் ரஜினியின் எந்திரன் திரைப்படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வெளிவந்தது. சூர்யாவின் சிங்கம் திரைப்படத்திற்க்கு கிடைத்த வெற்றியின் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளிவந்தன.

அதேபோல் லாரன்ஸின் காஞ்சனா திரைப்படம் மூன்று பாகங்கள் வரை வெளிவந்தன. சுந்தர் சியின் அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் முதல் பாகம் 2016 இல் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப பெற்றது.

மேலும் அது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதை கருத்தில் கொண்டு இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததும் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Leave a Comment