சினிமா உலகில் ஒரு நடிகை உச்சத்தை தொட அழகையும் சற்று திறமையையும் வெளிக்காட்டினாலே போதுமானது அப்படித் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.. கன்னட பெண்ணாக இருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது என்னவோ தெலுங்கு சினிமாவில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு டியர் காம்ரேட், கீதகோவிந்தம் போன்ற காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார். அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் உருவகத் தொடங்கினர் மேலும் புதிய பட வாய்ப்புகள் கிடைத்ததால் இவர் இந்தியா முழுவதும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.
தெலுங்கு சினிமாவையும் தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது கொண்டுதான் இருக்கின்றன குறிப்பாக தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இப்பொழுது தளபதி விஜய் உடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனால் அவரது மார்க்கெட்டு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவைச் சார்ந்தவர் இவர் முதலில் க்ரிஷ் பார்ட்டி என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக தனது தோழிகளுடன் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பவே செம அழகாகத்தான் இருந்திருக்கீங்க எனக்கூறி கமெண்ட் அடித்துள்ளனர் இதோ நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம்..