வாங்க மேடம் இப்ப தான் உங்களுக்கு நேரம் கிடைச்சதா.. ஷூட்டிங் ஸ்போட்டில் சிம்ரனை கதறவிட்ட எஸ்.ஏ. சந்திரசேகர்

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் இயக்குனர் ஏஸ். சி. சந்திரசேகர். முதலில் சட்டம் இருட்டறை, நெஞ்சினிலே துணிவிருந்தால், ஜாதிக்கு ஒரு நீதி, நீதி பிழைத்தது என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

இதன் மூலன் ஒரு சில நடிகர்களையும் வளர்த்து விட்டார் குறிப்பாக விஜயகாந்த் மற்றும் தனது மகன் விஜய்க்கும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து தூக்கி விட்டார். தொடர்ந்து சினிமா உலகில் ஓடிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் தன்னை வெளிகாட்டிக் கொண்டார். இப்படி சினிமா உலகில் வந்தவர் எப்பொழுதுமே ஸ்ட்ரிட்டாக இருக்கக்கூடியவர்..

யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத வரும் கூட.. அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1997 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய், சிம்ரன், சிவாஜி கணேசன், சரோஜாதேவி, மணிவண்ணன், அரவிந்த், எஸ் எஸ் சந்திரன்..

சார்லி, மோகன் ராமன், தளபதி தினேஷ், சரஸ்வதி என பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து சூப்பராக ஓடியது எப்படி  இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒன்ஸ்மோர் படப்பிடிப்பில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார்.

இதனால் கடுப்பான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் படப்பிடிப்பை பேக் அப் செய்துவிட்டாராம். இதனால் படக்குழு அப்பொழுது அதிர்ச்சி ஆகிவிட்டதாம்.. என்னது இவ்வளவு பெரிய ஸ்டிட்டான இயக்குனர் என பலருக்கும் தெரிந்ததாம்.

Leave a Comment