இதுவரை நாம் பலரும் பார்த்திராத நடிகர் விவேக்கின் அரியவகை புகைப்படத்தை பகிர்ந்த செல் முருகன்.! அதுவும் விவேக் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.?

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தமிழ் சினிமாவை விட்டு மறைந்த நடிகர் தான் விவேக் இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் விவேக் நடித்த படங்களை தற்போது வரை ரசிகர்களால் மறக்கவே முடியாது என்றுதான் கூறவேண்டும் நடிகர் விவேக் எந்த படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் மக்களுக்கு நல்ல சமூக அக்கறை கொண்ட கருத்துகளை கூறுவார்.

அந்த வகையில் பார்த்தால் நடிகர் விவேக் கிட்டத்தட்ட பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து விட்டு மறைந்து விட்டார் ஆனால் இவர் வைத்த மரக்கன்றுகள் தற்பொழுது மரங்களாக வளர்ந்து கொண்டே வருகிறது அந்த மரங்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு நடிகர் விவேக் ஞாபகம் தான் வருகிறதாம்.

மேலும் நடிகர் விவேக் அவரது மறைவிற்குப் பின்பு அவரது ஆசையை தற்பொழுது பல இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து நிறைவேற்றி வருகிறார்கள் இசையமைப்பாளர்,நடிகர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர் திடீரென ரசிகர்களை விட்டு மறைந்தது ஒரு பெரிய வருத்தத்தில் ரசிகர்களை ஆழ்த்திவிட்டது.

அந்த வகையில் பார்த்தால் நடிகர் விவேக்குடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நண்பர்களால் தற்போது வரை அவரை மறக்க முடியாமல் அவருடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவை பதிவிட்டு அவர்களை நினைவுகூர்ந்து வருகிறார்கள் சமீபத்தில் நடிகர் விவேக்கின் பிறந்த நாள் வந்துள்ளது அப்போது அவருடன் பழகி வந்த பல நண்பர்களும் தங்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்து வந்தார்கள்.

vivek
vivek

அதேபோல் நடிகர் செல் முருகன் விவேக்கின் புகைப்படத்தை பதிவிட்டு அவரை நினைவுகூர்ந்து வந்துள்ளார் ஆம் செல் முருகன் நடிகர் விவேக்கின் திரைப்படத்தில் அதிகமாக நடித்துள்ளதால் விவேக்கும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூட கூறலாம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து லைக் செய்து வருகிறார்கள்.

Leave a Comment