ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் என்பது போல திருமணமாகிய சில நாட்களிலே விவாகரத்தில் இறங்கிய பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் தங்களுடன் பணியாற்றிய பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் கமலஹாசன் மற்றும் சரிகா இவர்கள் இருவரும் திருமணம் ஆகி சில காலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு சுருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் பிறந்தார்கள் பின்னர் நமது நடிகர் விவாகரத்து செய்து கொண்டு கௌதமி உடன் திருமணம் செய்து கொள்ளாமலே சில நாள் வாழ்ந்து வந்தார்.

பார்த்திபன் சீதா இவர்கள் இருவரும் புதிய பாதை திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக காதல் மலர்ந்தது மட்டுமில்லாமல் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

ராமராஜன் நளினி இவர்கள் இருவரும் எண்பதுகளில் மிக பிரபலமான நடிகர்களாக வலம் வந்தவர்கள். மேலும் இவர்களுக்குள் காதல் வசப்பட்டதன் காரணமாக திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள் இவர்களுக்கு அருண் அருணா என இரட்டை குழந்தைகள் உள்ளார்கள்.

பிரதாப் போத்தன் ராதிகா ஆகிய இருவரும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் அந்த வகையில் இவர்கள் திருமணம் செய்து கொண்ட அடுத்த ஆண்டு விவாகரத்தில் இறங்கி விட்டார்கள் அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு ரிசல்ட் கார்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவையும் விவாகரத்தில் முடிவடைந்த in நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் உடன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டார்.

ரகுவரன் ரோகினி ஆகிய இருவரும் சிறந்த தம்பதிகளாக வளமுந்துள்ளார்கள் அந்த வகையில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் அரகுவரன் மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

பிரகாஷ்ராஜ் லலிதா இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்களும் மகன்களும் உள்ளார்கள் அந்த வகையில் பிரகாஷ்ராஜ் லலிதாவை 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு 2019 வர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுரேஷ் மேனன் ரேவதி இவருடைய திருமணம் 1986ஆம் ஆண்டு நடைபெற்றது அந்த வகையில் புதிய முகம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் திருமணமாகி  27 வருடங்கள் கடந்த பிறகு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்

செல்வராகவன் சோனியா அகர்வால்.  இவர்கள் இருவரும் ஒன்றாக திரைப்படங்களில் பணியாற்றிய பொழுது காதல் ஏற்பட்டு அவை திருமணத்தில் முடிவடைந்தது ஆனால் சோனியா அகர்வால் பல தீண்ட தகாத செயல்களை செய்ததன் காரணமாக விவாகரத்து செய்து கொண்டு வேறொரு மனைவியை தேடிக்கொண்டார் நமது செல்வராகவன்.

ஏ எல் விஜய் அமலாபால்  இவர்கள் இருவரும் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இவ்வாறு இவர்கள் திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகுவதற்கு முன்பாகவே விவாகரத்தில் இறங்கியது பலருக்கும் மன உளைச்சலை  ஏற்படுத்தியது.

நாக சைதன்யா சமந்தா இவர்கள் இருவருமே மிகப்பெரிய பிரபலம் தான் அந்த வகையில் சமந்தா பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதேபோல தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக எந்த ஒரு  காரணங்கள் இன்றியும் விவாகரத்து  செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment