மணிரத்னத்தை சீண்டி பார்க்கும் பிரபலம்.! சிக்கலில் பொன்னியின் செல்வன்.

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் பான் இந்திய திரைப்படமாக  உருவாகி வரும் இந்த திரைப்படத்தை மணிரத்னம் மற்றும்  லைகா புரொடக்ஷன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றது. சுமார் 500 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2 பாகங்களாக வெளிவர உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம்  வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமான அறிவுயப்பு வெளியான நிலையில் மேலும் இந்த திரைப்படம் குறித்த தேதியில் வெளியாகுமா எனறு பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தின்  போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் மியூசிக் சம்பந்தப்பட்ட வேலைகள் தொடங்காமல் இருக்கிறதாம். ஆகையால் இன்னும்  முடிவடையாமல் இருக்கும் பகுதிகளை விரைவில் முடித்துத் தருமாறு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து மணிரத்தினம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசைப்புயல் இந்த படத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு இசை அமைக்க முடியவில்லை என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். இதனால் இயக்குனர் மணிரத்னத்திடம் இசைப்புயல் இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் சரியாக இல்லை எனவே ரீஹிட் செய்யுங்கள் என்று கூறியுள்ளாராம்.

மேலும் மணிரத்னம் அவர்கள் அவரை தன்னுடைய படத்தைப் பற்றி இப்படிக் கூறி விட்டாரே என்ற பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். ஏ ஆர் ரகுமான்  கூறியதை கண்ட லைகா புரோடக்சன் ஏற்கனவே பட்ஜெட் அளவுக்கு மீறி சென்றுள்ளது. இதில் மறுபடியும் இந்த காட்சிகளை எடுத்தால்  செலவு எங்கே சென்றுவிடும் என்று புலம்பி வருகிறார்களாம். இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

Leave a Comment