பிக்பாஸ் அல்டிமேட்டில் மூன்றாவது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ள பிரபலம் – ஷாக்கான ரசிகர்கள்.!

சின்னத்திரையில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனிடையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களை வைத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் வரை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கிவந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்த பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறியதை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியை கடந்த இரு வாரங்களாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் அனைவரும் ஒவ்வொரு ஜோடிகளாக பிரிந்து பிக் பாஸ் கொடுக்கும் பல டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்ட் என்ட்ரி.

மூலமாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய இரு பிரபலங்களும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தன.  இதனை அடுத்து மற்றொரு பெண் போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்ற செய்தி இணையதளத்தில் கசிந்தது.  அதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா தான்.

பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாகவும் தகவல்கள் எதிர் பார்த்த நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் மூன்றாவது வைல்டு கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன் நுழைந்துள்ளார். மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஓவியா அல்லது லாஸ்லியா தான் வருவார்கள் என காத்திருந்த நிலையில் ரம்யா பாண்டியனை பார்த்தது பலருக்கும் ஷாக் ஆகி உள்ளனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.

Leave a Comment