ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து காணமல் போன பிரபலங்கள்.! Part-2

சினிமாவில் அதிகமான நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அதில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகிய பிரபலங்களைப் பற்றி தற்போது நாம் பார்க்கே இருக்கிறோம்.

ரிச்சா கங்கோபாத்யாய் இவர் மயக்கம் என்ன என்ற திரைப்படத்திலும் அதன்பிறகு ஒஸ்தி என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வரும் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் காணாமல் போய் ஒரு சில தெலுங்கு ஒரு திரைப்படத்தில் நடித்து சினிமாவே போதும் என்று கூறிவிட்டு யுஎஸ்ஏ வில் மாஸ்டர்ஸ் டிகிரி செய்வதற்கு சென்றுவிட்டார். தற்போது  இவர் ஜோ லஞ்சோல என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட யுஎஸ்ஏ வில் செட்டிலாகிவிட்டார்.

குட்டி ராதிகா 2003இல் ஷாம், அருண் விஜய் நடித்த வெளிவந்த இயற்கை படம் மூலமாக நடித்து பிரபலமானார். இதன்பிறகு வர்ணஜாலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு ஒரு 4,5 திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க இவர் கன்னடத்தில் தான்  அதிகம் நடித்துள்ளார். 2000 னில் ரத்தன் குமார் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.இவருடைய கணவர் 2005 இல்இறந்துவிட்டார். அதன்பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த முன்னால் cm ஆன குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கன்னட சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கீர்த்தி ரெட்டி  இவர் நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அவருக்கு முன்னால் தேவதை, நந்தினி, ஜாலி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. 2004 இல்அர்ஜுன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு சினிமா வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.2004ல் சுமந்த் என்கிற தெலுங்கு நடிகரை இவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2006 இல் இவரை விவாகரத்து செய்துவிட்டு பிறகுமற்றவர்கள் திருமணமும் செய்து கொண்டார்.

காம்னா இவர் ஜெயம் ரவியின் இதயத்திருடன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன்பிறகு மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து முழுக்க முழுக்க இவரும் மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 2014இல் ஒரு திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். மறுபடியும் கடந்த வருடம் கருடா என்ற திரைப்படத்தில் நடித்து மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

kaamna
kaamna

அஞ்சளா ஜவ்வரி இவர் தல அஜித் நடித்த பகைவன் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன்பிறகு உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதன்பிறகு ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, போன்ற  மொழிகளில் நடித்த இவர் 2004 பின்எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. அதன்பிறகு 2010 இனிது இனிது என்ற திரைப்படத்தில்  நடித்து மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால்பின்னர் ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து மறுபடியும் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

பூஜா பட் இவர் கல்லூரி வாசல் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.இவர் இந்த ஒரு படத்தில் மட்டும் தான் தமிழில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பிறகு தமிழ் சினிமா பக்கமே இவர் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் முழுவதுமே ஹிந்தி படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட்டில் ஒரு குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் வினித் 90 களில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் இதன்பிறகு 2005இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியே வந்த இந்திரனுக்கு என்ற திரைப்படத்தில் அடுத்து மிகவும் பிரபலம் அடைந்தார் என்று கூறலாம். அதன் பிறகு ஒளியும் ஓசை என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்தத் திரைப்படம் சரியாக போகாததால் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமா பக்கத்திலிருந்த ஒரு வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். 2019 இல் ஜிவி பிரகாஷ் நடித்த வெளிவந்த சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

vineeth
vineeth

Leave a Comment