வாய்க்கொழுப்பால் இருந்த இடம் தெரியாமல் போன பிரபலங்கள்..! லிஸ்ட்ல நம்ம அசினும் இருக்காங்க..!

தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு சில பிரபலங்கள் அதன் பிறகு தங்களுடைய வாய்க்கொழுப்பின் காரணமாக இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள் பின்னர் எப்படியாவது வாய்ப்பு பெற வேண்டும் என்ற காரணத்தினால் அயராது போராடிவரும் சில பிரபலங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

அசின்: இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் அதன் பிறகு இவர் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி சினிமாக்களிலும் நடித்த புகழ்பெற்ற நமது நடிகை சல்மான் கான் உடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பது சென்ற நமது நடிகை அங்கு தமிழ் நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ள கூடாது என்று ஆணையிட்டார்.

அதன் பிறகு இந்தி சினிமாவே கதி என இருந்த நமது நடிகையை தமிழ் சினிமா முற்றிலுமாக ஒதுக்கி விட்டது பின்னர் அங்கும் அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்.

அமலாபால் சினிமாவில் ஆரம்பத்தில் அறிமுகமானபோது சரியான வெற்றி கிடைக்காவிட்டாலும் தன்னுடைய அழகான கண்கள் முக பாவனை மூலமாக ரசிகர்களை வசிகரம் செய்து முன்னனி நடிகை அந்தஸ்தை பெற்றார் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதில் கவனம் இல்லாத நமது நடிகையை தற்போது சினிமாவும் ஒதுக்கிவிட்டது இதனால் தற்போது வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.

வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் அதுமட்டும் இல்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காமடி நடிகர் என்று சொல்லலாம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அரசியலில் புகுந்து தேவையில்லாத பேச்சுக்கு ஆளாகியது மட்டும் இல்லாமல் சினிமா இவரை முற்றிலுமாக பல வருடங்களாக ஒதுங்கி விட்டது இதனால் பழைய நிலைக்கு வருவதற்கு இவர் ஆயராது போராடிக் கொண்டிருக்கிறார்.

அப்பாஸ் இவருடைய வசீகரமான முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம் அது மட்டுமின்றி இவர் பெண்களின் கனவு கண்ணனாகவும் பிறந்து வந்தார் ஆனால் இவர் ஒரு கட்டத்திற்கு மேல் எந்த திரைப்படத்தில் நடிப்பது என்பது புரியாமல் தன்னுடைய சினிமா கேரியரையே இழந்துவிட்டார்.

மைக் மோகன் என செல்லமாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர் தான் மோகன் இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருந்த வேளையில் இவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஒருவர் இவரை விட்டு விலகிய காரணத்தினால் பின்னர் தன்னுடைய சொந்த குரலில் பேசி பட வாய்ப்பை இழந்து விட்டார்.

Leave a Comment