ajith

அட, இந்த மனசு தாயா கடவுள்.! விமானத்தில் ஊழியர்களை பார்த்து சிரித்துக் கொண்டே தாய்லாந்து சென்ற அஜித்தின் வைரல் வீடியோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது தாய்லாந்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது இதற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகரான அஜித் மூன்றாவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹச் வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை வலிமையாக திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் மூன்றாவது முறையான இவர்களுடைய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் துணிவு படம் அஜித்தின் 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்த வருகிறார் மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். மேலும் இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இது உண்மை கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது ஏற்கனவே எவ்வளவு சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது. நிலையில் ஆறு மாத காலங்களாக எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் டைட்டில் ஆகியவை வெளியானது.

மேலும் அதில் நடிகர் அஜித் மிகவும் மாஸாக இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இப்படிப்பட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்காக நடிகர் அஜித், நடிகை மஞ்சு வாரியார் உள்ளிட்ட படகுடியினர்கள் தாய்லாந்த் செல்வதற்காக கிளம்பியுள்ளார்கள் விமான நிலையத்தில் கோட் சூட்டியுடன் கெத்தாக இருக்குமா அஜித் அங்கு ஊழியர்களிடம் சிரித்து பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nayanthara

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் விழாவில் துள்ளி குதிக்கும் நயன்தாராவின் வீடியோ.! அதற்கு விக்னேஷ் சிவன் என்ன கூறியுள்ளார் பாருங்க..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இன்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதால் நயன்தாராவுடன் நான் எட்டாவது ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் குறிப்பாக துபாயில் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் முன் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்து இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் துபாயில் உள்ள வெட்ட வெளியான பகுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது, நயன்தாராவுடன் நான் எட்டாவது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன்.

nayanthara 5
nayanthara 5

என் தங்கமே உனக்கு எனது நன்றி ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்த நாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய் ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும் அதை நீ தான் எனக்கும் கற்றில் தந்தாய் நீ என்னை நேசிக்கும் விதம் என மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

nayanthara 6
nayanthara 6

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு குழந்தை போல் நயன்தாரா துள்ளி குதிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் தற்பொழுது உள்ள இளம் காதல் ஜோடிகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருக்கும் இவர்களுடைய அன்பான இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ponniyin-selvan-1

சோழ வம்சத்தை வேரோடு அழிக்கும் வீரபாண்டியன் ஆபத்தவிகள்.! பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ இதோ..

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடுக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏராளமானவர்கள் படமாக்க வேண்டும் என நினைத்தார்கள் அந்த வகையில் மணிரத்தினமும் 20 ஆண்டுகளாக இந்த கதினை படமாக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியோடு படமாக்கி இருக்கிறார் இந்த படம் கிட்டத்தட்ட 570 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நடிகர்களின் கதாபாத்திரங்கள், டீசர், ஆடியோ வெளியீடு, ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள் இந்த படத்தில் மெயின் வில்லனாக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் பற்றிய எக்ஸ்கிளூசிவ் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவின் மூலம் பொன்னியின் செல்வன் சோழர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் சோழர்களுக்கு மிகப்பெரிய எதிரிகளாக பாண்டியர்கள் இருந்தார்கள்.

எனவே செவ்யூர் போர் மிகவும் முக்கியமாக வாய்ந்த ஒன்றாக இருந்தது சொல்லப்போனால் இந்த மொத்த கதையின் காரணமும் இந்த போர் மட்டும்தான் சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் இந்த போரில் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் கதையை கொய்து விடுவான் என் காரணமாக சோழனை கவருவதற்காக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சோழ நாட்டிற்குள் புகுவார்கள்.

அந்த கூட்டத்தின் ராணியாக நந்தினி தேவி இருப்பாள். இவ்வாறு அனைவரும் எதிர்க்கும் பாண்டிய ஆபத்து தவியாக ரவிதாசனாக கிஷோர் நடித்திருக்கிறார். மேலும் ரியாஸ் கான் வேளாளராகவும் இவர்களின் காடுகளில் பதுங்கி நந்தினியின் கட்டளைகளுக்காக காத்திருப்பார்கள் நந்தினி தேவி அரண்மனையில் உள்ளே இருந்தேன் ஆதித்ய கரிகாலனின் கடைசி நாளுக்காக காத்திருப்பாள்.

பழைய நிலைமைக்கு மீனாவை கொண்டு வந்த அவருடைய தோழிகள்.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக ஏராளமான நடிகைகள் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு சேட்டிலான நடிகைகள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மீனா இவருடைய கணவர் கொரோனா தாக்கத்தினால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதன் காரணத்தினால் கணவரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சில வாரங்களாக சோகத்தில் மீனா இருந்து வந்த நிலையில் இவருடைய தோழிகள் பலரும் முயற்சி செய்து மீண்டும் மீனாவை பழைய நிலைமைக்கு கொண்டுள்ளார்கள் இவ்வாறு மீனா மிகவும் உற்சாகமாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை மீனா கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இறந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதன் காரணத்தினால் மீனாவும் அவருடைய மகளும் மிகவும் சோகத்தில் இருந்து வந்தார்கள் எனவே மீனாவை அந்த சோகத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக அவருடைய தோழிகளான கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா உள்ளிட்டவர்கள் பல முயற்சி செய்து வந்தார்கள்.

meena
meena

மேலும் இவர்கள் ஒன்றாகவும் இருந்து வந்த நிலையில் மீனாவை சமீபத்தில் கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றதாகவும் சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தோழிகளின் முயற்சியினால் தற்பொழுது மீனா தனது கணவர் இறந்த சோகத்தில் இருந்து வெளியாகி உள்ளதாக தெரிய வருகிறது அதாவது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கெட் வாக் நடப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ள நிலையில் இவர் இந்நிலையில் மாறி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

indian-2

இந்தியன் 2 பட சூட்டிங்கில் இயக்குனர் சங்கருடன் இருக்கும் மாஸ் வீடியோவை வெளியிட்ட நடிகர் கமலஹாசன்.!

சினிமாவில் நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஆர்வம் வந்ததால் தொடர்ந்து அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்த நிலையில் சமீப காலங்களாக மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டதால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் முதலில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சற்று முன்பு உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் அந்த வீடியோவில் கமலஹாசனிடம் இயக்குனர் சங்கர் அன்றைய தினம் எவ்வாறு எப்படிப்பட்ட காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்கான விளக்கும் காட்சி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை தொடர்ந்து இந்த படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விக்ரம் திரைப்படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ameer bhavani

திருமண கெட்டப்பில் பாவனி- அமீர்.! வீடியோவை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் மேலும் பலரும் தற்பொழுது சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் னபாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. தற்பொழுது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர்கள் அமீர் பாவனியை காதலிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே கூறினார். பிறகு வெளியில் வந்ததும் பல இடங்களில் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்தார்கள். இந்நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார்கள் அமீர் பல விதங்களில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஆடி கார் ஒன்றை வாங்கி இருந்தார்கள் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அடுத்தது என்ன திருமணம் தான் என கூறி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைகள் மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார்கள் இவர்கள் நடித்துள்ள இந்த ஆல்பம் சாங் நேற்று மாலை யூடியூப் சேனலில் வெளியானது. பாவனியை பார்த்தவுடன் அமீர் காதலில் விழுகிறார் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் மிகவும் அழகான இவர்களுடைய ரொமாண்டிக் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலின் இறுதியில் இந்து, முஸ்லிம் முறைப்படி இவர்களுடைய திருமணம் முடிகிறது இவ்வாறு இவர்கள் மிகவும் யோசித்து அழகாக எடுத்துள்ள இந்த சீன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்படுகிறது மேலும் தற்பொழுது வரையிலும் மில்லியன் கணக்கில் ஆலோசர்களை பெற்றுள்ளது இந்த பாடல்.

10 வருடங்களுக்கு பிறகு ராம்ராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ படத்தின் டீசர் இதோ.!

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் ராமராஜன் கடந்த பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தினை ஏற்படுத்தி உள்ளார். அந்த வகையில் இவர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாமானியன் என டைப் வைக்கப்பட்டுள்ளது.

டைட்டில் வெளியான அடுத்த நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டு அசத்தியுள்ளனர். முன்னணி நடிகரான ராமராஜன் 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் கிட்டதட்ட 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் ராம்ராஜன் நடித்து வரும் சாமானியன் திரைப்படத்தினை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தின் டைட்டில் வெளியான அடுத்த நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை பட குழுவினர்கள் வெளியிட்டிருந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போத இந்த படத்தின் டிசரை வெளியிட்டு உள்ளது.

இந்த டீசரில் நூலகத்தில் அத்துமீறி நுழையும் ராமராஜன், ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் அந்த நூலகரை பணயமாக வைத்துக் கொண்டு மிரட்டுவது அதன் பின்னர் துப்பாக்கியால் அந்த நூலகரை சுட்டுக் கொள்வது என திர்லரான காட்சிகள் அமைந்துள்ளது அந்த நூலகராக மைன் கோபி அவர்கள் நடித்துள்ளார். இவ்வாறு இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

samaniyan
samaniyan

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கார்த்திக் குமாரின் கதையில் ராஹேஷின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாகி வரும் சாமானியன் திரைப்படத்திற்கு அச்சு ராஜா மணி இசையமைத்துள்ளார் மேலும் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகுல் மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா.! வீடியோவை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்த நகுல்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் நகுலின் மனைவி சுருதி பாஸ்கர் மிகவும் அழகாக பாடிய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நகுலின் மனைவியா இவ்வளவு அழகாக பாடுறது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நகுல் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் எரியும் கண்ணாடி உள்ளிட்ட சில சில திரைப்படங்கள் மட்டுமே இவருடைய நடிப்பில் வெளியானது.

பிறகு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் மேலும் அதில் இருந்தும் இவர் சமீபத்தில் விலகிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் நகுல் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய மகள் மற்றும் மனைவியை ஆகியோர்களுடன் இருக்கும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வருகிறார்.

NAKUL
NAKUL

இப்படிப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது தனது மனைவி பாடும் பாடல்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலை சுருதி பாஸ்கர் மற்றும் நகுல் பாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட அது தற்பொழுது லைக்குகளை குவிந்து வருகிறது.

அதில் இறுதியாக தூக்கம் இல்லாத இரவுகள் மற்றும் சோர்வுற்ற பகல்களுக்கு மத்தியில் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பதிவு செய்தோம் அகிரா வீடியோவில் உட்கார வர மறுத்து நாங்கள் பதிவு செய்யும் பொழுது எங்கள் தொலைபேசியை கூட தள்ளினார் நாங்கள் பாடும் பொழுது அமோர் பேசுவதை பின்னணியில் நீங்கள் கேட்கலாம் என்று பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

kani-1

குக் வித் கோமாளி கனிக்கு ஹைதராபாத்தில் இவ்வளவு பெரிய வீடா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் முக்கியமாக நிகழ்ச்சிகள் தான் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது அந்த வகையில் கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் மிகவும் ஃபேமஸாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஏராளமான பிரபல தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் கனி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் முதல் மகள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார்.

கனிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வெற்றி பெற்றார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்ததில்லை. எனவே இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இவருக்கு தற்பொழுது வள்ளி மயில் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் அந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது இவ்வாறு பிசியாக இருந்து வந்தாலும் கனி சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் அண்மையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டை வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை கனிக்கு இவ்வளவு பெரிய வீடா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் இவர் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றால் இவருடைய அப்பா கணவன் என இருவருமே இயக்குனர்கள் எனவே இவ்வளவு பெரிய வீடு இருப்பதை பார்த்து ஆச்சரியப்படத் தேவையில்லை.