kaadhu-vaakula-renedu-kaadhal

இந்த தொலைக்காட்சியில் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் ஒலிபரப்ப போகிறார்களா.! வைரலாகும் தகவல்..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர்களை வைத்து காத்து வாக்குகள் இரண்டு காதல் திரைப்படத்தினை இயக்கியிருந்தார்  இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.

மேலும் சமந்தாவின் கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டைப் பெற்றது அந்த வகையில் கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நடிகை சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்திலும், நடிகை நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

மேலும் இந்த படம் திரையரங்குகளை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழியாக கடந்த மே மாதம் 20ஆம் தேதி அன்று வெளியானது. படத்தினை மாஸ்டர் மற்றும் கோபுரா ஆகிய திரைப்படங்களை தயாரித்த லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்கள் இருக்கு பெரும்பாலும் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கும் இசையமைத்திருந்தார். இவர்களை தொடர்ந்து விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் கதிர் ஒழிப்பதிவு செய்து இருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதற்கான வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது வருகின்ற அக்டோபர் மாதம் நான்காம் தேதி மகா நவமி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணி அளவில் இந்த படம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

coffee with kadhal

ஒரே பெண்ணை காதலிக்கும் ஜீவா, ஜெய் காபி வித் காதல் படத்தின் டிரைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுந்தர் சி இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காபி வித் காதல்.

இந்த படத்தில் மூன்று கதாநாயகர்கள் மற்றும் மூன்று கதாநாயகங்களை வைத்து உருவாகி உள்ளது. அந்த வகையில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர்களாம் நடிகை மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தினை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது பிறகு இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டார்கள். ஜீவா, ஜெய் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது போன்ற காண்பித்து உள்ளார்கள் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த ட்ரைலர்.

nayanthara-viknesh-shivan

விக்கி-நாயன் திருமண வீடியோவை வெளியிட முடிவு செய்த நெட்பிளிக்ஸ்.! டீசரோடு வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மகாலிங்காலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுடைய திருமண வீடியோவை ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது இது குறித்த டாக்குமெண்டரியை இயக்குனர் கௌதமேனன் இயக்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில் தற்போது அந்த திருமண வீடியோவை விரைவில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் அடுத்த மாதம் இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நேற்று துபாயில் நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதனை தொடர்ந்து நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில் பலரும் பொறாமையில் இருந்து வருகிறார்கள் ஏனென்றால் இவர்களின் திருமணம் நடக்கும் பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனை விட்டு விரைவில் பிரிந்து விடுவார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்கள் ஒன்றாக இருந்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ajith

அட, இந்த மனசு தாயா கடவுள்.! விமானத்தில் ஊழியர்களை பார்த்து சிரித்துக் கொண்டே தாய்லாந்து சென்ற அஜித்தின் வைரல் வீடியோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது தாய்லாந்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது இதற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகரான அஜித் மூன்றாவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹச் வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை வலிமையாக திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் மூன்றாவது முறையான இவர்களுடைய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் துணிவு படம் அஜித்தின் 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்த வருகிறார் மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். மேலும் இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இது உண்மை கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது ஏற்கனவே எவ்வளவு சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது. நிலையில் ஆறு மாத காலங்களாக எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் டைட்டில் ஆகியவை வெளியானது.

மேலும் அதில் நடிகர் அஜித் மிகவும் மாஸாக இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இப்படிப்பட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்காக நடிகர் அஜித், நடிகை மஞ்சு வாரியார் உள்ளிட்ட படகுடியினர்கள் தாய்லாந்த் செல்வதற்காக கிளம்பியுள்ளார்கள் விமான நிலையத்தில் கோட் சூட்டியுடன் கெத்தாக இருக்குமா அஜித் அங்கு ஊழியர்களிடம் சிரித்து பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nayanthara

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் விழாவில் துள்ளி குதிக்கும் நயன்தாராவின் வீடியோ.! அதற்கு விக்னேஷ் சிவன் என்ன கூறியுள்ளார் பாருங்க..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இன்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதால் நயன்தாராவுடன் நான் எட்டாவது ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் குறிப்பாக துபாயில் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் முன் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்து இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் துபாயில் உள்ள வெட்ட வெளியான பகுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது, நயன்தாராவுடன் நான் எட்டாவது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன்.

nayanthara 5
nayanthara 5

என் தங்கமே உனக்கு எனது நன்றி ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்த நாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய் ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும் அதை நீ தான் எனக்கும் கற்றில் தந்தாய் நீ என்னை நேசிக்கும் விதம் என மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

nayanthara 6
nayanthara 6

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு குழந்தை போல் நயன்தாரா துள்ளி குதிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் தற்பொழுது உள்ள இளம் காதல் ஜோடிகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருக்கும் இவர்களுடைய அன்பான இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ponniyin-selvan-1

சோழ வம்சத்தை வேரோடு அழிக்கும் வீரபாண்டியன் ஆபத்தவிகள்.! பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ இதோ..

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடுக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏராளமானவர்கள் படமாக்க வேண்டும் என நினைத்தார்கள் அந்த வகையில் மணிரத்தினமும் 20 ஆண்டுகளாக இந்த கதினை படமாக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியோடு படமாக்கி இருக்கிறார் இந்த படம் கிட்டத்தட்ட 570 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நடிகர்களின் கதாபாத்திரங்கள், டீசர், ஆடியோ வெளியீடு, ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள் இந்த படத்தில் மெயின் வில்லனாக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் பற்றிய எக்ஸ்கிளூசிவ் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவின் மூலம் பொன்னியின் செல்வன் சோழர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் சோழர்களுக்கு மிகப்பெரிய எதிரிகளாக பாண்டியர்கள் இருந்தார்கள்.

எனவே செவ்யூர் போர் மிகவும் முக்கியமாக வாய்ந்த ஒன்றாக இருந்தது சொல்லப்போனால் இந்த மொத்த கதையின் காரணமும் இந்த போர் மட்டும்தான் சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் இந்த போரில் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் கதையை கொய்து விடுவான் என் காரணமாக சோழனை கவருவதற்காக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சோழ நாட்டிற்குள் புகுவார்கள்.

அந்த கூட்டத்தின் ராணியாக நந்தினி தேவி இருப்பாள். இவ்வாறு அனைவரும் எதிர்க்கும் பாண்டிய ஆபத்து தவியாக ரவிதாசனாக கிஷோர் நடித்திருக்கிறார். மேலும் ரியாஸ் கான் வேளாளராகவும் இவர்களின் காடுகளில் பதுங்கி நந்தினியின் கட்டளைகளுக்காக காத்திருப்பார்கள் நந்தினி தேவி அரண்மனையில் உள்ளே இருந்தேன் ஆதித்ய கரிகாலனின் கடைசி நாளுக்காக காத்திருப்பாள்.