pistha movie

மணப்பெண் யார் என்று தெரியாமலேயே திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை.! காமெடி கலாட்டா நிறைந்த பிஸ்தா படத்தின் டிரைலர் இதோ..

ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிஸ்தா. மெட்ரோ பிளட் மணி போன்ற திரைப்படங்களில், நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் சிரிஷ் சரவணன். பிஸ்தா படத்தில் அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் மிகவும் கலாட்டா திரைப்படமாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் ஒட்டுமொத்த காமெடி கதாபாத்திரங்களும் இணைந்து நடித்துள்ள நிலை யில் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கிறது அதனை டைலரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த டிரைலரின் ஆரம்பத்தில் கும்பகோணத்தில் ஓர் அகத்திய திருமணமொன்று ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் கல்யாணப் பெண் யார் என்று தெரியாமலேயே ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் செய்கிறார். அதனை தொடர்ந்து திருமணத்திற்கு வைக்கும் பேனரில் தொடங்கி பல இடங்களிலும் திருமண பெண் முகம் மட்டும் மறைத்து காட்டப்படுகிறது எனவே அந்த திருமண பெண் யார் என தெரிந்து கொள்வதில் இந்த படத்தின் ஆவலை தூண்டபடுகிறது. மேலும் காமெடி நடிகர் செந்தில் நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களைத் தொடர்ந்து இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சதீஷ் மற்றும் யோகி பாபுவின் காமெடி ரசிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் இறுதியில் கவுண்டமணியின் காமெடியான பிஸ்தா மந்திரி, பருப்பு போன்ற வசனங்களுடன் ட்ரைலர் முடிகிறது.

amy-jakshan

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சனின் மூன்று வயது குழந்தை.! வைரலாகும் வீடியோ..

சினிமாவை பொருத்தவரை நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அது அவரவர்களுடைய விருப்பம் தங்களுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழலாம் அப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவர் தமிழில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விக்ரமுடன் ஐ, தனுசு உடன் இணைந்து தங்க மகன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு காரணம் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் George panayiotou என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறைகள் வாழ்ந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் Andreas jax panayiotou என இவர்களுடைய மகனுக்கு பெயர் வைத்தார்கள்.

மேலும் இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் எமி ஜாக்சன் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும்  இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எமி ஜாக்சன் மூன்று வயதாகும் தனத்தின் மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எமி ஜாக்சனுக்கு எவ்வளவு பெரிய மகனா நல்லா வளர்ந்து விட்டார் என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

baakiya lakshmi 1

திருமணத்தை தடுக்கவந்த ராமமூர்த்தியை தள்ளிவிட்ட கோபி.! குற்ற உணர்ச்சியில் ராதிகா விறுவிறுப்பாகும் எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமண நடக்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கோபி மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமணம் நடக்குமா.? நடக்காதா? என்பதனை மையமாக வைத்து தான் கடந்த வாரங்களாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

பெற்றோர்கள் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டு பாக்கியாவுடன் குடும்பம் நடத்தி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறார் கோபி. இப்படிப்பட்ட நிலைகள் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலுக்கு சுற்றி வந்துள்ளார். பிறகு அவருடன் பழக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.

அந்த வகையில் பாக்யாவிற்கும் இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த நிலையில் விவாகரத்து கொடுத்து விட்டார். இதற்காக பல பித்தலாட்ட வேலைகளை செய்த கோபி ராதிகாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில் தன்னுடைய அம்மா ஈஸ்வரியிடம் இதனை பற்றி கூறுகிறார் இதனால் கோபமடைந்த ஈஸ்வரி இந்த திருமணம் எப்படி நடக்கிறது என்பதை நான் பார்க்கிறேன் என்ன சவால் விட்டு விடுகிறார்.

இதனை தன்னுடைய கணவர் ராமமூர்த்தியிடம் கூற ராமமூர்த்தியும் கோபியை எச்சரிக்கிறார் இருந்தாலும் கோபி நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய நிலையில் நேரடியாக ராமமூர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார் அங்கு ராதிகா கோபியின் ரிசபஷன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அங்கு சென்று கோபியை பார்த்து காலம் போன காலத்தில் கல்யாணம் பண்ணிக்க போறியா என சட்டையை பிடித்து கேள்வி கேட்க கோபத்தில் ராமமூர்த்தி தள்ளி விடுகிறார் கோபி. இதனை அறிந்ததும் கோபி ராதிகாவின் திருமண மண்டபத்திற்கு சமையல் செய்வதற்கான வேலையை பார்க்க வந்த பாக்கியா மாமனாரை அழைத்து இந்த வேலை எனக்கு மிகவும் முக்கியம் எனக் கூறுகிறார் எனவே இந்த திருமணம் கோபியின் பிளான் படி வெற்றிகரமாக நடக்கிறது.

kaadhu-vaakula-renedu-kaadhal

இந்த தொலைக்காட்சியில் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் ஒலிபரப்ப போகிறார்களா.! வைரலாகும் தகவல்..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர்களை வைத்து காத்து வாக்குகள் இரண்டு காதல் திரைப்படத்தினை இயக்கியிருந்தார்  இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.

மேலும் சமந்தாவின் கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டைப் பெற்றது அந்த வகையில் கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நடிகை சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்திலும், நடிகை நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

மேலும் இந்த படம் திரையரங்குகளை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழியாக கடந்த மே மாதம் 20ஆம் தேதி அன்று வெளியானது. படத்தினை மாஸ்டர் மற்றும் கோபுரா ஆகிய திரைப்படங்களை தயாரித்த லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்கள் இருக்கு பெரும்பாலும் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கும் இசையமைத்திருந்தார். இவர்களை தொடர்ந்து விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் கதிர் ஒழிப்பதிவு செய்து இருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதற்கான வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது வருகின்ற அக்டோபர் மாதம் நான்காம் தேதி மகா நவமி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணி அளவில் இந்த படம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

coffee with kadhal

ஒரே பெண்ணை காதலிக்கும் ஜீவா, ஜெய் காபி வித் காதல் படத்தின் டிரைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுந்தர் சி இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காபி வித் காதல்.

இந்த படத்தில் மூன்று கதாநாயகர்கள் மற்றும் மூன்று கதாநாயகங்களை வைத்து உருவாகி உள்ளது. அந்த வகையில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர்களாம் நடிகை மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தினை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது பிறகு இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டார்கள். ஜீவா, ஜெய் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது போன்ற காண்பித்து உள்ளார்கள் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த ட்ரைலர்.

nayanthara-viknesh-shivan

விக்கி-நாயன் திருமண வீடியோவை வெளியிட முடிவு செய்த நெட்பிளிக்ஸ்.! டீசரோடு வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மகாலிங்காலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுடைய திருமண வீடியோவை ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது இது குறித்த டாக்குமெண்டரியை இயக்குனர் கௌதமேனன் இயக்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில் தற்போது அந்த திருமண வீடியோவை விரைவில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் அடுத்த மாதம் இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நேற்று துபாயில் நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதனை தொடர்ந்து நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில் பலரும் பொறாமையில் இருந்து வருகிறார்கள் ஏனென்றால் இவர்களின் திருமணம் நடக்கும் பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனை விட்டு விரைவில் பிரிந்து விடுவார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்கள் ஒன்றாக இருந்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.