nagarjuna

நடிகர் நாகார்ஜுனாவின் இரட்சன் பட ட்ரைலர் இதோ.!

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நாகார்ஜுனா நடித்திருந்த தீ கோஸ்ட் என்ற திரைப்படம் தற்பொழுது தமிழில் இரட்சன் என்ற பெயரில் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி அன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் மொத்தம் இரண்டு நிமிடங்கள் இருக்கின்றது அதில் நாகார்ஜுனாவின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் வசனங்கள் போன்றவை இடம்பெற்று இருக்கின்றனர். மேலும் நாகர்ஜுனாவுடன் இணைந்து சோனால் சவுக்கான், அனிகா சுரேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களை தொடர்ந்து பிரவீன் சந்தாரு இயக்கியுள்ளார். மேலும் அந்த ட்ரெய்லரில் ஓய்வு பெற்ற ரா ஏஜென்ட் விக்ரம் என்ற கேரக்டரில் உள்ள நாகார்ஜுனாவிற்கு அவரது தங்கையிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது அதில் எனது மகள் ஆபத்தில் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார்.

தங்கை மகளை காப்பாற்ற களமிறங்கும் விக்ரமுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதை இவ்வாறு விக்ரமின் தங்கை மகளாக நடிகை சுரேந்திரன் நடித்துள்ளார். மிரட்டலாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

prabu-deva

7 மொழிகளில் உருவாகும் மஞ்சு வாரியாருக்கு அழகாக நடனம் கற்றுத் தரும் பிரபுதேவா.! வைரலாகும் வீடியோ..

சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியார் இவர் மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றின் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

இவருக்கு அழகாக நடனம் கற்று தரும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மஞ்சு வாரியார் ஆய்ஷா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, அரபு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொத்தம் ஏழு மொழிகளில் உருவாகிறது அமீர் பல்லிக்கல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜெயச்சந்திரன் எம் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர் அரபி மொழியும் கலந்து உருவாகும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அந்த பாடலுக்கு நடன இயக்குனர் பிரபு தேவா பணியாற்றியுள்ளார்.

எனவே இந்த பாடலில் நடன இயக்குனர் பிரபு தேவா மஞ்சு வாரியாரை அழகாக ஆட வைத்த காட்சிகள் தற்பொழுது வீடியோவாக வெளியாகி உள்ளது இந்த பாடலில் மஞ்சுவாரியாருடன் இணைந்து பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாட்டைச் சேர்ந்த நடன கலைஞர்களும் நடனமாடிய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-sethupathy

தலன்னு சொன்னதும் அரங்கை அதிரவைத்த மாணவர்கள்.! காண்டில் விஜய்செதுபதி.. வைரல் விடியோ

பேசிக் கொண்டிருக்கும் பொழுது மாணவர்கள் கத்தியதால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாம கத்தாதிங்க நம்ம என்ன பேசிட்டு இருக்கோம் நீங்க என்ன செஞ்சுகிட்டு. இருக்கீங்க என கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜவான் திரைப்படத்திற்காக தயாரித்து வருகிறார் இந்த படத்தை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதாவது யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள் ஏனென்றால் டைம் இருக்கு இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடிந்த பின்னர் சந்திக்கும் பொழுது அவன் எனக்கு நண்பன் ஆகிறான்.

எல்லாத்துக்கும் டைம் கொடுங்க உடனே எதிர்வினையற்ற வேண்டாம் நாம் உடல் ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள் இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம் உங்க மூளைய எப்படி செயல்படாமல் செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களின் வாயிலாக சண்டை போட்டுக்கலாம் அசிங்கமா பேசிக்கலாம் என்று உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க நம்பிடாதீங்க டெக்னாலஜி உங்கள திங்க பாக்குது உங்கள பயன்படுத்த வைத்து மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம் என்று பார்க்கிறார்கள். என்னென்னலாம் சாப்பிட வைக்கலாம், எதெல்லாம் சாப்பிட்டா நீங்க நோயாளி ஆகுவீங்க, நோயாளி ஆனா என்ன மருந்து சாப்பிடுவீங்க எவ்வளவு நாள் நோயாளியாக உங்களை கஷ்டப்பட வைக்க முடியும் உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் அப்படிங்கிறதுல இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நம்மள மயக்குவாங்க ஜாக்கிரதையா இருக்கணும் எனக் கூறிய விஜய் சேதுபதி இறுதியில்,

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்  அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை”.

என்கின்ற திருக்குறளை கூறினார் இதில் கடைசியாக அவர் தலை எனக் கூறியதை கேட்டதும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர் இதனால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாமல் கர்த்தாதிங்க நாம என்ன பேசிக்கிட்டு இருப்போம் நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க என்ன கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ram-sedhu

ராமர் பாலத்தை பற்றி உருவாகியுள்ள அக்ஷயகுமாரின் ‘ராம் சேது’ படத்தின் டீசர் இதோ.!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷய் குமார் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ராம் சேது என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் டீசர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டீசரை பார்க்கும் பொழுது இலங்கைக்கும் தமிழுக்கும் இடையே உள்ள ராமர் பாலம் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் திரில்லர் கதைய அம்சத்துடன் உருவாகியுள்ளது.

மேலும் ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை கிளப்புகிறது. எனவே இந்த டீசர் தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது மேலும் இந்த படம் தமிழைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஆடம் பிரிட்ஜ் என்றும் புராண காலத்தில் இருந்து ராமர் பாலம் என்று கூறப்பட்டு வரும் இந்த பாலம் குறித்த உண்மை தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக அதிகப்படியான பொருட்ச அளவில் உருவாகியுள்ள இந்த படத்தினை லைகா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

pistha movie

மணப்பெண் யார் என்று தெரியாமலேயே திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை.! காமெடி கலாட்டா நிறைந்த பிஸ்தா படத்தின் டிரைலர் இதோ..

ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிஸ்தா. மெட்ரோ பிளட் மணி போன்ற திரைப்படங்களில், நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் சிரிஷ் சரவணன். பிஸ்தா படத்தில் அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் மிகவும் கலாட்டா திரைப்படமாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் ஒட்டுமொத்த காமெடி கதாபாத்திரங்களும் இணைந்து நடித்துள்ள நிலை யில் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கிறது அதனை டைலரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த டிரைலரின் ஆரம்பத்தில் கும்பகோணத்தில் ஓர் அகத்திய திருமணமொன்று ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் கல்யாணப் பெண் யார் என்று தெரியாமலேயே ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் செய்கிறார். அதனை தொடர்ந்து திருமணத்திற்கு வைக்கும் பேனரில் தொடங்கி பல இடங்களிலும் திருமண பெண் முகம் மட்டும் மறைத்து காட்டப்படுகிறது எனவே அந்த திருமண பெண் யார் என தெரிந்து கொள்வதில் இந்த படத்தின் ஆவலை தூண்டபடுகிறது. மேலும் காமெடி நடிகர் செந்தில் நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களைத் தொடர்ந்து இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சதீஷ் மற்றும் யோகி பாபுவின் காமெடி ரசிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் இறுதியில் கவுண்டமணியின் காமெடியான பிஸ்தா மந்திரி, பருப்பு போன்ற வசனங்களுடன் ட்ரைலர் முடிகிறது.