“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்கு போக முடியாது.? Fake Show – ஆவேசமாக பதிவை போட்ட நடிகை கஸ்தூரி.!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் மக்களிடையே ரீச் அடைந்து ஐந்து சீசன்கள் வரை தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை நடந்த பிக் பாஸ் 5 சீசன்களில் சர்ச்சைக்குள்ளான சில போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார்யில் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட்.

இந்த நிகழ்ச்சியில் ஜூலி, சினேகன், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஷாரிக், தாமரை, சுருதி, அபிநய், அபிராமி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் மட்டுமே நமக்கு ஒளிபரப்பப்படும். ஆனால் தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டார்யில் 24 மணி நேரமும் பார்க்கலாம்.

இந்த நிலையில் ஓவியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் சில காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது வைல்டு கார்டு என்ரியாக நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் சிலர் அழைத்தனர்.

அதற்கு அவர் கோபமாக பதிலளித்துள்ளார். “எனக்கு குடும்பம் இருக்கு, வேலை இருக்கிறது இந்த ஷோவுக்கு வர நேரமில்லை. குறிப்பாக இந்த fake ஷோவிகிற்கு பேமெண்ட்காக என்னால் ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்காவது கொண்டு செல்லுங்கள் என கஸ்தூரி கோபமாக கூறியுள்ளார்.

Leave a Comment