இளம் இயக்குனருக்கு போன் போட்டு படம் பண்ணலாமா.. என கேட்டேன் சூப்பர் ஸ்டார் ரஜினி.? அதிரிச்சியில் உறைந்து போன சிறுத்தை சிவா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் என்னதான் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தி வந்தாலும் பெருமளவு மக்கள் இன்னும் கொண்டாடாமல் இருக்கின்றனர் காரணம் அதே செண்டிமெண்ட் அதே சீன்கள் என அனைத்தும் ஒரே மாதிரியான கதை என கூறப்படுகிறது.

போதாத குறைக்கு ரசிகர்களை சுத்தமாக இந்த படம் கவரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரஜினியின் படம் என்பதால் வசூல் வேட்டை மட்டும் நடத்தி வருகிறது இதுவரை கிட்டத்தட்ட 200 கோடியை தொட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்த படத்தில் நடிப்பாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

ஏனென்றால் அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு போய் வந்த பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அண்ணாத்த படமும் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை என்பதால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் ரஜினி நடித்தது போதும் இனி அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என கூறிவந்த நிலையில் சினிமா என்பது வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் எனக்கு சினிமா பிடிக்கும் நான் நடிப்பேன் என்பதுபோல..

ரஜினியின் உடலில் உயிர் இருக்கும் வரை நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது அடுத்ததாக இவர் இப்ப பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளார் அந்த வகையில் சிறுத்தை சிவா தேசிங்கு பெரியசாமி என இவரது லிஸ்டில் பலர் இருந்தாலும் அடுத்த வாய்ப்பை இவர் வேறு ஒருவருக்கு தான் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் போன் போட்டு ஒரு படம் பண்ணலாமா என கேட்டுள்ளார்.

மேலும் இவருடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது காரணம் ரஜினி ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த போது கார்த்திக் சுப்புராஜ் ரஜினிக்கு பேட்ட படத்தை கொடுத்து அழகு பார்த்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்போதே முடிவு செய்துவிட்டனர் இன்னொரு இணைய வேண்டுமென்று அதுவே விரைவிலேயே நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment