லைவில் நயன்தாராவை அசிங்கப்படுத்திய பிருந்தா மாஸ்டர்.! கண்ணுல என்ன ஒரு பீதி..

நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஆன்ட்டி போல இருக்கிறார் என பலரும் கேலி செய்து வந்தார்கள் இதனால் இவரை பலரும் ஓரம் கட்டினர். இந்த நிலையில் இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடல் எடையை மிகவும் குறைத்து கவர்ச்சியாகவும் நடிப்பேன் என தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார்.

அந்த வகையில் நயன்தாரா படு கவர்ச்சியாக நடித்த திரைப்படங்களில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம். இந்த படத்தில் பிரபுதேவா நயன்தாராவிற்கு எந்த ஒரு சரியான கதையும் கொடுக்காமல் கவர்ச்சியாக மட்டுமே நடிக்க வைத்திருந்திருப்பார். இந்த படம் 2009ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ்சான நிலையில் வில்லு படத்தின் ப்ரோமோஷன்காக நயன்தாரா, விஜய், பிரபுதேவா உள்ளிட்ட அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள் மேலும் ரசிகர்களிடம் போன் மூலம் பேசினார்கள்.

அதை பலரும் நயன்தாரா மற்றும் விஜய் அவர்களுடன் நடிப்பினை பற்றியும் வில்லு படத்தினை பற்றியும் பேசிருந்தார்கள் அப்பொழுது நடன இயக்குனரான கலா மாஸ்டரும், பிருந்தா மாஸ்டரும் தொடர்பு கொண்டு விஜய்யும் வில்லு படத்தையும் நயன்தாராவையும் புகழ்ந்து தள்ளினார். அவ்வப்பொழுது பிருந்தா மாஸ்டர் பேசும்பொழுது நயன்தாரா ஏன் இவ்வளவு சைலன்டா இருக்கிறாய் என கேட்கிறார்.

அதற்கு நயன்தாரா திடீரென சிரிக்கிறார் மேலும் அதற்கு நான் எப்பொழுதும் இப்படிதான் என உங்களுக்கு தெரியாதா? என பதில் கூறுகிறார். உடனே அதற்கு பதில் அளித்த பிருந்தா மாஸ்டர் நயன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்க உன்னுடைய நிஜ முகத்தை காட்டு என கலாய்த்து தள்ளுகிறார். பிறகு இதற்கு நயன்தாரா என்னுடைய மனதை வாங்காதீங்க என சொல்ல மானமா அப்படின்னா என்ன என பிருந்தா மாஸ்டர் நயன்தாராவை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

பிறகு உடனே நயன்தாரா தயவுசெய்து இவங்களோட போனை கட் பண்ணுங்க என தொகுப்பாளரிடம் கூற உடனே பிருந்தா மாஸ்டர் நீ எப்பொழுதும் நல்ல பொண்ணு தான் என மாற்றி பேசுகிறார். நயன்தாரா சிரித்து பேசியிருந்தாலும் அவருடைய கண்ணில் பீதி தெரிகிறது என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment