விஜய் மன்ற நிர்வாகிகளை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.!

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேற்று மதியம் பனையூரில் சந்தித்தார் எனவே தன்னுடைய ரசிகர்களுக்கு மதியம் பிரியாணி விருந்தளித்திருந்தார். இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் காலில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விழும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இது குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்த சந்திப்பில் நடிகர் விஜய் இதற்கு மேல் மாதம் ஒருமுறை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பேன் என கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்த ஏராளமான கேள்விகளுக்கும் விஜய் பதில் அளிப்பார் என புஸ்ஸி ஆனந்த் ஆனந்த் பத்திரிக்கையாளர்களுக்கு இன்றைய நிகழ்ச்சி முடிந்த நிலையில் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் இயக்க கூட்டணியில் விஜய் என்ன பேசினார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை விட புஸ்ஸி ஆனந்து தான் மாஸ் காட்டினார் என நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில் ஒரு பக்கம் ரசிகர்கள் நெகட்டிவ் ஹேஸ்டாகுகளை ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். அந்த வகையில் புஸ்ஸி ஆனந்த் காலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலை எழுந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மட்டும் இன்று ஏராளமான யூடியூப் பிரபலங்கள் மற்றும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் ஷேர் செய்து ட்ரெண்டிங்க்க்கி வருகிறார்.

அதில் அவருக்கு கூறியதாவது விஜய்யின் தளபதி புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கும்பிடும் மற்ற நிர்வாகிகள் விஜயை விட செம கெத்து காட்டினார் என்று ரசிகர்கள் பெருமிதம் என அந்த வீடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்களுடன் சண்டையை ஏற்படுத்தியுள்ளார் புளு சட்டை மாறன். மேலும் இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அரசியலில் களமிறங்குவதற்காக தான் இவ்வாறு விஜய் செய்கிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

Leave a Comment