கமலின் இந்த படத்தின் காப்பி தான் கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் கதை.! மொத்தமாக காலி செய்த ப்ளூ சட்டை மாறன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் கவின் இந்த சீரியல் இருக்கு அடுத்ததாக தொடர்ந்து சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இவருக்கு அடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது அவருடைய நடிப்பில் டாடா படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்துள்ளார் மேலும் வி.டி.வி கணேஷ் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இவர்களை அடுத்து ஜென்மார்ட்டின் இசையமைக்க இன்று முதல் கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் தமிழகம் எங்கும் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எனவே தொடர்ந்து ட்விட்டர் விமர்சனம், இன்ஸ்டாகிராம் விமர்சனங்கள் ஆகியவை சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தை பிரபல யூட்யூப் தொகுப்பாளர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார்.

எந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வந்தாலும் விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனம் தந்து வருகிறார் இதன் காரணமாக ஏராளமான இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் இவர் மேல் கடுப்பிலிருந்து வருகிறார்கள் அந்த வகையில் தான் டாடா திரைப்படத்தின் மொத்தமாக காலி செய்துள்ளார்.

அதாவது கல்லூரி பருவத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் காதலித்து வரும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுடைய காதலை மேலும் கொண்டு செல்கின்றனர் அந்த நேரத்தில் திருமணத்திற்கு முன்பே அபர்ணா கர்ப்பமாகி விடுகிறார் கருவை கலைத்து விட கவின் செல்ல முடியவே முடியாது என அபர்ணாதாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் உடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சில காலங்கள் கழித்து அபர்ணா தன்னுடைய குழந்தையை தனியாக விட்டுவிட்டு கவிதை பிரிந்து விடுகிறார் எனவே கவின் அந்த குழந்தையை வளர்க்கிறார் கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் டாடா படத்தின் முழு கதை. இந்த நிலையில் புளு சட்டை மாறன் டாடா படத்தின் கதை கமலஹாசன் திரையுலகில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தின் கதை என்றும் அது இயக்குனர் கணேஷ் அப்படியே காப்பி அடித்து கிடைக்காத எழுதி இருக்கிறார் எனவும் விமர்சித்திருந்தார்.

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிகம் காதல் மலரும் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளவார்கள் இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கும் நிலையில் சாவித்திரியிடம் அந்த குழந்தை இறந்து விட்டதாக பொய் சொல்லி விடுவார்கள் ஜெமினி கணேசன் வெளிநாடு சென்று இருப்பதால் அவருக்கு குழந்தை பற்றி எதுவும் தெரியாது பின்னர் ஜெமினி கணேசன் தன்னுடைய மகனான கமலஹாசனை தன்னுடனே வளர்த்து வருவார். எனவே இந்த படத்தின் கதையை தான் டாடா படத்தின் கதையை ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார் மேலும் இந்த கதையை பார்க்கும் பொழுது தொலைக்காட்சி சீரியல் தான் ஞாபகம் வருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment