பிக் பாஸ் வீட்டில் புதிய வரவு இன்று வைல்ட் கார்ட் என்ட்றியாகும் பிரபலம்.! இதோ பரபரப்பு தகவல்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 27 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேறியுள்ளார் மீதம் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் உள்ளேதன் இருக்கிறார்கள்.

ரேகா வெளியேறியதும் வைல்ட் கார்டு என்ட்ரியாக  அர்ச்சனா உள்ளே நுழைந்தனர், அர்ச்சனா உள்ளே சென்றதும் பல சர்ச்சைகளை உருவாக்கினார், அதனால் நிகழ்ச்சி சூடுபிடித்து பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்ல இருக்கிறார், அதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வைல்ட் கார்டு என்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, இந்த புதிய வரவு வேறு யாரும் இலலை சர்ச்சைகளுக்கு பெயர் போன சுசித்ரா தான்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிற நிலையில் சுசித்ரா உள்ளே வருவதால் மேலும் விருவிருப்பு அதிகரிக்கும் என தெரிகிறது, மேலும் இந்த வாரம் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பாடகி சுசித்ரா உள்ளே வர இருக்கிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் சுசித்ரா 25 நாள் போட்டியை பார்த்திருப்பார் அதனால் யார் யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை புரிந்து வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய ஒருசில போட்டியாளர்கள் இருந்தாலும் சுசித்ரா உள்ளே வருவது இன்னும் சுவாரஸ்யம் பரபரப்பையும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment