நரகம் என்றால் பிக்பாஸ் வீடு தான்.! பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி பதிவு.!

உலகத்திலேயே மிகவும் கொடூரமான நரகம் என்றால் அது பிக்பாஸ் வீடு தான் என பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் தெரிவித்துள்ளது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பல போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவருக்கு பலரும் தொந்தரவு தந்ததாகவும் அதனால் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியே சென்றார் அவர் வெளியே சென்ற பிறகு சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் அடிக்கடி பல விஷயங்களை தெரிவித்து வருகிறார்.

அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் வீடு மிகவும் மோசமான இடம் இரிடேட் செய்யும் இடம் அந்த வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன பிறகும் இன்னும் என்னால் பழைய நிலைமைக்கு மாற முடியவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு நரகம் போல் அந்த வீடு இருக்கிறது எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்கள் பலரும் மன வேதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் நெகட்டிவிட்டி பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறார்கள் எனவும் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி என்பதை மறந்து தற்பொழுது டார்ச்சர்களை அனுபவிக்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. அதனால் ஒரு சில நாட்கள் வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு நிம்மதியாக இருக்க போகிறேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நகரம் என்று பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர் கூறியபொழுது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vanitha

Leave a Comment

Exit mobile version