15 லட்சம் பணத்திற்காக சகதியில் கட்டிப் உருளும் சுருதி மற்றும் ஜூலி.! வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் தங்களுடைய இடத்தை தக்க வைப்பதற்காக புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று  தனி ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில வாரங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதலில் 14 போட்டியாளர் கலந்து கொண்டார்கள் அதன் பிறகு சில ஒயல்டு கார்ட் போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒரு போட்டியாளர் மட்டும் பிக்பாஸ் அளிக்கும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் அறிவித்தார். இந்த பணப்பெட்டி முதலில் மூன்று லட்சத்தில் அறிவிக்கப்பட்டது அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து 15 லட்சம் வரை வந்துள்ளது.

இதனை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என சுருதி மற்றும் ஜூலி  இருவரும் போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த நிலையில் 15 இலட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ள தகுதியானவர் யார் என்பதற்காக பல போட்டிகளை வைக்கிறார் பிக்பாஸ்.  முதல் போட்டியில் கூடைகளில் யார் அதிக பந்துகளை நிரப்புகிறார்கள் அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் என பிக்பாஸ் அறிவிக்கிறார் இதனால் ஜூலி மற்றும் ஸ்ருதி  ஆகிய இருவரும் சேற்றில் புரண்டு கூடையில் பந்துகளை சேர்க்கிறார்கள்.

இதன் இறுதியில் ஸ்ருதி வெற்றி பெற்றுள்ளார் என பிக்பாஸ் அறிவிக்கிறார் இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று 15 லட்சம் பணத்தை யார்  தட்டி செல்வார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment