பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு இதற்கு மக்கள் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டத்தை நோக்கி தற்பொழுது அடியெடுத்து வைத்துள்ளது தற்பொழுது ஆரம்பித்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அப்படித்தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் தனது டிஆர்பி ரேட்டை ஏற்றிக்கொள்வதற்காக பிக்பாஸில் சர்ச்சையான ஆட்களையும், சென்டிமென்டான ஆட்களையும் வைத்து, அதில் தனது டிஆர்பி ஏற்றுக்கொள்வதில் விஜய் டிவி தவிர வேறு எந்த டிவியும் அடித்துக் கொள்ளாத அளவிற்கு செயலை செய்து கொண்டு வருகிறது.
கடந்த சீசனில் தாடி பாலாஜி அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த பெரிய பிரச்சனையை வெடிக்கச் செய்து தனது டிஆர்பி ரேட்டை ஏற்றி கொண்டது விஜய் டிவி. இதனைப் போல இந்த சீசனிலும் அப்படிப்பட்ட நபர்களை தான் தேடி வருகிறது.
இதற்கு ஏற்றார்போல ஒரு ஜோடியும் தற்போது கிடைத்துள்ளது என்று கூறவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ அவர்கள் தனது கணவரான ஈஸ்வர் வேறொரு பெண்ணை வைத்திருக்கிறார் என்று ஊரறிய உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி கலந்து கொள்வார்கள் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களை வைத்து தான் தனது டிஆர்பி ரேட்டை எகிற வைக்க விஜய்டிவி ஒருபக்கம் முயற்சி செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
![jayasree-husband](http://localhost/tamilnew/wp-content/uploads/2020/03/jayasree-husband-31219m1-1.jpg)
சம்பளம் அதிகம் என்பதால் இவரது சொந்த பிரச்சனையை பிக்பாஸ் வீட்டிற்குள் தீர்த்துக் கொள்வார்கள் என தெரியவருகிறது. எனவே இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என தெரியவருகிறது.