பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அனிதாவின் செயலை பார்த்து நெகிழ்ந்த பிரபலங்கள்.!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அனிதா சம்பத். இவர் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது காலா திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார் அதனைத்தொடர்ந்து  சர்க்கார் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார் மற்றும் காப்பான் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.

அதன்பிறகு இவர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படங்கள் 2.O, தர்பார், இரும்பு மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதில் அனிதா மற்றும் ஷாருக்  இணைந்து நடனம் ஆடி நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார்கள்.

இந்த வாரத்தில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று சுற்றில் அனிதா சம்பத் மற்றும் சாறு ஆகிய இருவரும் பார்வையற்றவராக நடித்து நடனமாடினார். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது நடுவர்கள் மத்தியிலும்  நல்ல பாராட்டு கிடைத்தது.

இந்த நிலையில் நடன நிகழ்ச்சி முடிந்தவுடன் அணித சம்பத் கண்தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அதை நிரூபிக்கும் வகையில் நானே முதல் நபராக கண்தானம் செய்கிறேன் என்று அனிதா சம்பத் கூறியிருக்கிறார். தற்போது இவருக்கு பாராட்டு மழை குவிய ஆரமித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version