பிக்பாஸ் ஆரியின் அதிரடி மாஸ்.! தல, தளபதியெல்லாம் சைடு வாங்கிடுவார் போல!! இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம், இதோ..

நடிகர் ஆரி ஆடும் கூத்து, ரெட்டைசுழி போன்ற பல்வேறு படங்களில் சினிமா உலகில் கால் தடம் பதித்தார்.

அத்தகைய படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரா  விட்டாலும் திரை உலகில் அவ்வப்போது படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது அந்த வகையில் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து.

நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.

இதை தொடர்ந்து ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த இவருக்கு கமலஹாசன் தொகுத்த பிக் பாஸ்சீசன் 4ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக பிக்பாஸ் சீசனில் விளையாடிய போட்டியாளரின் விளையாட்டை பார்த்து பலரும்  அதற்கு ஏற்றவாறு பிக் பாஸ் சீசன் 4 – ல் விளையாடினார்.

ஆனால் நடிகர் ஆரி வீட்டில் எப்பொழுதும் நேர்மையாக மற்ற போட்டியாளர்கள் இடம் பேசியும், விளையாடியும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது வெறுப்பை சம்பாதித்தாலும் மக்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

அதன் காரணமாக டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். வெளியே வந்த பிறகும் இவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆரி சென்னை மெரினாவில் உள்ள ஒரு மாலில் ரசிகர்களை நேரில் சந்தித்தார் அப்போது ரசிகர்களுடன் ஒன்றுகூடி செல்பி எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment