இரண்டாவது திருமணத்த்திற்கு பிறகும் ஏன் தாலி அணியவில்லை.! ஜூலி கேட்டதால் உண்மையை உடைத்த தாமரை..

பிரபல  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கிட்டதட்ட ஐந்து மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

சமிபத்தில் பிக்பாஸ் சீசன் 5 முடிந்த நிலையில் தற்போது ரசிகர்களின் விருப்பத்தின் படி ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட சில போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணிநேரமும் என்ன நடக்கிறது என்பதை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.  அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 மூலம் கரகாட்டக்காரியாக தனது குழந்தை  பருவத்தில் இருந்து தற்போது வரையும் பணியாற்றி வரும் தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் சீசன் 5 வில் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியே இந்நிகழ்ச்சியின் இறுதிகட்ட வரை இருந்தார்.  இந்நிலையில் மீண்டும் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இவர் பெரும்பாலும் அனிதா சம்பத் மற்றும் ஜூலி ஆகியோர்களுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போது ஜூலி இரண்டாவது திருமணமான பிறகும் ஏன் நீங்கள் தாலி அணியவில்லை என கேட்க அதற்கு தாமரை நாங்கள் கவரிங் செயினை வைத்து தான் திருமணம் செய்து கொண்டோம்.எனக்கு கவரிங் எனக்கு ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் அதனை கழட்டிவிட்டேன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு போனதும் தங்கத்தில் புதிதாக செயின் வாங்கி போட வேண்டும் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

 

Leave a Comment

Exit mobile version