நான் டைட்டில் வின்னர் கிடையாது.. பிக்பாஸ் வீட்டில் இவருக்கு நடந்தது அநியாயம்.! அணுகுண்டை வீசிய அர்ச்சனா

bigg boss tamil season 7 : விஜய் டிவியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 7 சமீபத்தில் நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா பிரதீப் ஆண்டனி குறித்து கூறியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 முந்தைய சீசன்களை விட பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்டது 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தனர்.

ஆட்கள் அதிகம் என்பதால் போட்டியாளர்களுக்கிடையே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது அப்படி மாயா பூர்ணிமாவின் புள்ளி கேங் உருவான நிலையில் மக்கள் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்தனர் இதனை அடுத்து புள்ளிக் கேங்கில் இருந்து ஒவ்வொருவரும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

captain miller box office : படும் அடியாக சரிந்த கேப்டன் மில்லரின் வசூல்.! 4 வது நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா.?

மாயாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றாலும் விஜய் டிவியின் உதவினால் ஃபைனல் வரையிலும் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் மேலும் தான் வெற்றி பெறுவேன் என்ற ஆணவத்தில் இருந்த இவருக்கு ஃபைனல் முற்றுப்புள்ளி ஆக அமைந்தது. அப்படி கடைசியில் விஷ்ணு, தினேஷ், மணி, மாயா மற்றும் அர்ச்சனா இருவரும் ஃபைனலில் இருந்தனர்.

இவர்களில் விஷ்ணு வெளியேறியதை அடுத்து தினேஷ் எலிமினேட் ஆனார் இதனை அடுத்து கடைசியாக மாயா வெளியேற மணி அர்ச்சனாவில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இவ்வாறு பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா தற்பொழுது பிரதீப் ஆண்டனி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் இந்நிகழ்ச்சியின் உண்மையான டைட்டில் வின்னர் பிரதீப் தான். அவருக்கு அதிகமாக பிக் பாஸ் வீட்டிற்குள் அநியாயம் நடந்தது எனக் கூறியுள்ளார்.

சந்திரமுகி 2 பட இயக்குனர் என்னை தனியாக அழைத்து.. கதறி கதறி அழுத லட்சுமிமேனன்..