வைல்ட் கார்டு என்ட்ரியால் மிரண்டு போன பிக் பாஸ் போட்டியாளர்கள்.! போதும் என ஆண்டவரிடம் கதறல்..

Bigg Boss season 7 today promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது வைல்ட் கார்டில் 5 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். எனவே இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் போதும் இனிமேல் வேண்டாம் என ஆண்டவரிடம் கதறும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

18 போட்டியாளர்களுடன் கடந்த 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 15 போட்டியாளர்களுடன் சுவாரசியமான டாஸ்குகளுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியில் ஐந்து பேர் அறிமுகமாவதனால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற இருக்கின்றனர்.

அதன்படி தற்பொழுது குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் வினுஷா, யுகேந்திரன் இவர்கள் இருவரும் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மூன்று போட்டியாளர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து பிக் பாஸ் ஹவுஸில் என்ட்ரி கொடுக்க போட்டியாளர்கள் அதிர்ச்சடைகின்றனர்.

எனவே இந்த மூணு பேரு யாரு இனிமே போதும் வேற யாரும் வேண்டாம் அந்த கதவை இழுத்து மூடுங்க என மாயா, பூர்ணிமா, ஜோவிகா என அனைத்து பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் கதறுகிறார்கள். இந்த நேரத்தில் கமல்ஹாசனை பார்த்த அனைவரும் சார் போதும் சார் இனிமேல் வேண்டாம் என கூறுகிறார்கள்.

இவ்வாறு ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இருக்கும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் இந்த ஐந்து பேரையும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம். 15 போட்டியாளர்களுக்கு வீடு ரணகளமான நிலையில் தற்போது மூன்று பேர் என்ட்ரி கொடுத்துள்ளார்கள்.