இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.! வாய் கொழுப்புக்கு விழுந்த பூட்டு…

Bigg Boss Nomination: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் ஆறு பேர் சிக்கி இருக்கும் நிலையில் இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் நிகசன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம்n எலிமினேஷன் நடைபெறவில்லை. எனவே இதற்கும் சேர்த்து இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த இடுப்பழகி நீ தான்.. பலரையும் புலம்ப வைத்த தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள்

இந்நிலையில் பொதுவாக கமலின் சனி, ஞாயிறு எபிசோடுக்காக ரசிகர்கள் காத்து வருவது வழக்கம் ஆனால் சமீப காலங்களாக கம்மல் சரியாக போட்டியாளர்களை கையாளவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் கமல் வந்தாலே அதனை கேலி செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். முக்கியமாக தற்பொழுது எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இந்த வாரம் ஓபன் நாமினேஷன் டாஸ்க் நடைபெற்றது வழக்கம் போல போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்கள் மீது வன்மத்தை கொட்டி தீர்த்தனர். இறுதியில் கூல் சுரேஷ், அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா, அர்ச்சனா, தினேஷ், நிக்சன் ஆகிய ஆறு பேரும் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

2023-ல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கிய சினிமா பிரபலங்கள்.!

இந்த வாரம் பூர்ணிமா நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். மேலும் சரவண விக்ரம், மணி ஆகியோர்களும் தப்பித்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற உள்ளதாம். அதன்படி அர்ச்சனாவிடம் சண்டை போட்டதால் நிக்சனும், பலவீனமான போட்டியாளரான அனன்யாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுகின்றனர்.

Exit mobile version