பூர்ணிமாவை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களை அவமானப்படுத்தும் மாயா.! முதல் நாளே கதறி அழும் அர்ச்சனா..

Bigg Boss season 7 Tamil today promo 3:  பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தற்பொழுது 5 பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்திருப்பதனால் 19 போட்டியாளர்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதற்கு மேல் சுவாரசியமாக மாறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா போன்றவர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களை சுத்தமாக மதிக்காதது போல் தெரிகிறது. மேலும் பூர்ணிமா தினேஷிடம் முளை இருக்கா என்று கேட்டு கராராக பேசியது இரண்டாவது ப்ரோமோவில் இடம் பெற்றிருந்தது. முதல் ப்ரோமோவில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த ஐந்து பேருடன் விசித்திராவையும் சேர்த்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா தேர்ந்தெடுத்துள்ளார்.

பிரேமம் பட இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? சினிமாவில் இருந்து விலக காரணம் இதுதான்..

இவ்வாறு வைல்ட் கார்டு போட்டியாளர்களை டார்கெட் செய்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் சண்டை போட்டு வருகிறார்கள். இவர்களுக்கிடையே சண்டை முற்றுவது போல் ப்ரோமோக்கனில் தெரிகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து வந்து அர்ச்சனாவிடம் பேச வைக்கிறார்.

அப்பொழுது அனைவரிடமும் பூர்ணிமா அர்ச்சனா வரும்பொழுது நாம யாரும் சரியாக வெல்கம் பண்ணல என்று சொல்றாங்க என்று கூற இதற்கு மாயா அதை எதிர்பார்க்கிறிங்கனா எதிர்பார்க்காதீங்க அது நடக்காது என்று சொல்ல அதற்கு அர்ச்சனா எதிரியாகவே இருந்தாலும் வீட்டிற்கு வராங்கனா ஒரு 5 நிமிஷம் சிரிச்சு பேசிட்டு அதுக்கப்புறம் தான் சண்டையை பேசணும் என கூற மாயா மற்றவர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்.

படத்தில் காஸ்ட்லியான வில்லன்.. நிஜத்தில் சிம்பிளாக இருக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

உங்களோட கலாய்களுக்கும், மீம்ஸ்களுக்கும் நாங்க எப்படி அமைதியா போகனு நினைக்கிறீங்க என்று சொல்ல அதற்கு மாயா ஏதாச்சும் டிஸ்ரெஸ்பெக்ட் ஃபுல்லா பேசியிருந்தால் சாரி எனக் கூற இதற்கு அர்ச்சனா அழ ஆரம்பிக்கிறார் பிறகு ஹக் செய்ய மாயா கூப்பிட அர்ச்சனா முடியாது என்று சொல்கிறார்.