திருமணதிற்கு பிறகு நானும் இந்த அனைத்து கொடுமைகளையும் சந்தித்தேன் அபிஷேக்கின் முன்னாள் மனைவி பரபரப்பு பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வந்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர்தான் அபிஷேக், அபிஷேக்கை பலருக்கும் தெரிந்து இருக்கும். அபிஷேக் யூடியூபில் தன்னை அதிமேதாவி என காட்டிக் கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வருவார். மேலும் இவருக்கு சினிமா பையன் என செல்லப்பெயர் இவரே வைத்துக் கொண்டார் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவு பிரபலமாகிவிட்டார்.

மேலும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் பொழுது இவர் கொடுக்கும் ரியாக்ஷனை கண்டு கடுப்பாகாதவர்களே இருக்க முடியாது மேலும் சமீபத்தில் விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்தார் அப்பொழுது வெயிலோடு விளையாடி பாடலை பாடி அனைவரையும் வச்சி செய்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பொழுது இரண்டாவது நாளிலேயே தன்னுடைய அம்மா பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் பேசி அழுதார்.

மேலும் நேற்று எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் திருமண வாழ்க்கை முடிந்தது பற்றி பேசிய அபிஷேக் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து சில தகவலை கூறினார் அதாவது தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் தவறான ஆளாக இல்லாமல் இருந்திருந்தால் எனது அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என கூறினார்.

அபிஷேக் எதனால் திருமணம் முறிந்தது என்று மட்டும் கூறவே இல்லை இந்த நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா கடந்த ஜூலை மாதம் திருமணத்திற்கு பின் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றி பேசினார் அப்போது அவர் பேசியதாவது டொமஸ்டிக் வயலேன்ஸ் நானும் அனுபவித்து உள்ளேன்.

அதேபோல் அது குறித்த நான் பேசியபோது யாரும் நம்பவில்லை அதனால் அந்த உறவை விட்டு வெளியே வந்துவிட்டேன் என பேசியுள்ளார் இப்படி இதுபோல் உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் அந்த உறவை விட்டு வெளியே வந்து விடுங்கள் என பேசினார்.

Leave a Comment