முதல் வாரத்திலேயே வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்.! வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 10ஆம் தேதியன்று அறிமுகமாகி தற்பொழுது ஒரு வரமாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே யாரும் வெளியேற மாட்டார்கள் ஆனால் இந்த முறை ஒரு பிரபலம் இந்த போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக ஆரம்பித்த நிலையில் 18 போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது. அதோடு அனைத்து போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு மிகவும் காமெடியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் சந்தித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதோடு ஒருவரைக்கூட விடாமல் அனைத்து போட்டியாளர்களையும் மிக காமெடியாக கலாய்த்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து  தானாகவே வெளியேறி உள்ளார் என்று கூறப்படுகிறது.

என்ன காரணம் என்று தெரியவில்லை தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா மாரிமுத்து அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார் என்று கமலஹாசன் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் நமிதா மாரிமுத்து இரு தினங்களுக்கு முன்புதான் தனது வாழ்க்கையில் நடந்த பல உருக்கமான தகவல்களை பகிர்ந்தார்.

namitha marimuththu

இவர் திருநங்கையாக இருப்பதால் இவர் வாழ்வில் பல சங்கடமான விஷயங்கள் நடந்துள்ளது. அனைத்திலும் போராடி தற்போதுதான் முன்னேறி உள்ளார் இதுகுறித்து பலவற்றையும் கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்தார். தற்பொழுது அனைத்து ரசிகர்களின் ஃபேவரட்  போட்டியாளராக மனதில் இடம்பிடித்த இவர் திடீரென்று வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

Leave a Comment

Exit mobile version