பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி நமிதாவுக்கு பதில் இவர் தான்.! இது எப்டி இருக்கு.

பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது ஒரு வாரமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீடு மிகவும் பசுமையாக இருப்பது போலவும் நான்கு சீசன்களை விடவும் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வையில் கார்டில் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் என்றி கொடுக்க உள்ளார் என்ற தகவல் அனைவரின் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் பொழுதே  இந்நிகழ்ச்சியில் நடிகை சகிலாவின் மகளான மிலா பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என்று அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் எதிர்பார்க்காமல் பிக்பாஸ் போட்டியாளராக நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு திருநங்கை கலந்துகொள்வார் என்று தகவல் வெளி வந்ததால் அது மிலா என்று ரசிகர்கள் முடிவு செய்து மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் ஆனால் இவர்  கலந்து கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

sakeela-daughter-mila
sakeela-daughter-mila

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் இவருக்கு பதிலாக மிலா  பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் கூறிவருகிறார்கள்.  இன்னும் சிலர் ரசிகர்கள் ஒரு திருநங்கை வீட்டிற்கு செல்வதால் மீண்டும் ஒரு திருநங்கை அனுப்ப பட வாய்ப்பு இல்லை எனவே நிகழ்ச்சிக்கு மிலா செல்ல மாட்டார் என்றும் கூறிவருகிறார்கள். இது குறித்து உண்மையான தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பொறுத்திருக்க தான் வேண்டும்.

Leave a Comment