இது என்னடா கவினுக்கு வந்த சோதனை.! மனுஷன் தலையில் கை வைத்து புலம்புறாரே வைரலாகும் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரப அடைந்தவர் கவின். இதற்கு அடுத்ததாக சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இதுமட்டுமல்லாமல் தாயுமானவன் சீரியலிலும் நடித்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக வெள்ளித்திரையில் 2012 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன், போன்ற படங்களில் நடித்து வந்தார் இதற்கு அடுத்ததாக ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் தான் முதலில் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர்  விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய இதன் மூலம் நான்கு முறை ஸ்டார் விஜய் விருதைப் பெற்றுள்ளார்.

சென்ற ஆண்டு ஒளிபரப்பப்பட்ட விஜய் டிவி தொலைக்காட்சியின் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அதில்  கவினும் பங்குபெற்றார் இதன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் என கூறலாம் அதுவும் முக்கியமாக பெண்களுக்கு பிடித்தவராக தற்போது விளங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து  இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கவின் தற்போது  ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் 2020 போதும் பா இனிமே இருக்கும்  பாதிகாலமாசம் சந்தோஷமாக முடிச்சி வபீங்கன்னு நம்புறோம் என தலையில் கை வத்துக்கொண்டு சோகமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

kavin 2

Leave a Comment

Exit mobile version