பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் குதித்த பிக் பாஸ் ஜூலி.! எந்த தொலைக்காட்சியில் தெரியுமா வெளியான புரோமோ

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி இவர் அந்த பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் கிடைத்தது இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் களமிறங்க இருப்பதாக  ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் முதல் சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் தான் ஜூலி  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்களில் இவரும் ஒருவர். இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விதம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூலி அவர்களை பலரும் கலாய்க்க தொடங்கினார்கள் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த திரைப்படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜூலி சின்னத்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தென்றல் வந்து என்னைத் தொட சீரியலில் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது நடிக்க இருக்கிறார் இந்த இரண்டாம் பாகத்தில் அபியின் மீது கோபத்தில் இருக்கும் வெற்றி  தன்னால் முடிந்த வரை குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறான் ஆனால் வெற்றியை ஜூலி தான் அழைத்து வருகிறார் மேலும் இந்த சீசனில் அவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உடனே அவரின் தந்தை எதற்காக வெற்றிடம் நீ இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய் என்று கேட்க. ஜூலி அவருடைய உதவியால் தான் நான் அட்வகேட் ஆனேன் அதை மறந்து விட்டீர்களா என ஜூலி கேட்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது மேலும் இந்த ஜூலியின் அட்வகேட் கதாபாத்திரம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Leave a Comment

Exit mobile version