சம்பள விசயத்தில் பிரியங்காவை பின்னுக்கு தள்ளி செம்ம மாஸ் காட்டும் பிக்பாஸ் போட்டியாளர் – ஷாக்கான ரசிகர்கள்.

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் விதம் மக்களை மிகவும் கவர்ந்தது.

அதனால் இவர் வரும் நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களை மக்கள் மிஸ் பண்ணாமல் கண்டு களிப்பார்கள். தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

இந்த சீசன் ஆரம்பத்தில் பெரிதும் மக்கள் அனைவரையும் கவரவில்லை அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் சில சண்டை சச்சரவுகள் நடந்த வண்ணமே உள்ளன. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை கிராம மற்றும் நகர அணி என இரு அணிகளாக பிரித்து லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆன நபர்களில் குறைந்த ஒட்டு வாங்குவார்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அந்த வகையில் தற்போது கம்மி ஒட்டு  சின்ன பொண்ணு அல்லது அபிநய் வாங்கி இருந்தால் யாரேனும் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வெளிவந்த மற்றொரு தகவல் என்னவென்றால் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருப்பவர்களில் முக்கியமான ஒருவர் பிரியங்கா. அவருக்கே ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் தான் சம்பளமாம் ஆனால் அவரைவிட அபிநய்க்கு ஒரு வாரத்திற்கு 2.5 லட்சம் சம்பளம் என தெரியவந்துள்ளது. ஆக பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் முதலில் இருப்பவர் அபிநய் என கூறப்படுகிறது.

Leave a Comment