அறுவை சிகிச்சை செய்திருக்கும் பிக்பாஸ் பாவனி.! புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பாவனி தற்போது திடீரென மருத்துவமனையில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் பாவனி ரெட்டி, இவரை அடுத்து உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கு பெற்றார்.

ஆரம்பத்திலிருந்து சிறப்பாக  விளையாடி வந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ரீயாக வந்த அமீர் காதலிப்பதாக கூறியது நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் தன்னுடைய காதல் கணவரின் மறைவினால் இதனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் பாவனி இருந்து வந்த நிலையில் பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்தவுடன் அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார்.

தற்பொழுது ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் விரைவில் அமீர் பாவனி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் எப்பொழுதும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதோட மட்டுமல்லாமல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் இருவரும் இணைந்து காதலர்களாக நடித்திருந்தார்கள்.

இவர்களுடைய காட்சி சில நிமிடங்கள் மட்டுமே பங்கு பெற்றிருந்தது இதனையும் தாண்டி வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் புகைப்படத்தை பாவனி வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது என் வாழ்க்கையில் இந்த 15 நாட்களை கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது என் கழுத்தில் சிறிய வழி ஏற்பட்டது வலி நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது நான் பல எழும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன் என் பிசியோதெரபியை ஆரம்பித்தேன் ஆனால் வலி தாங்க முடியாமல் போனது நான் பல தூக்கமில்லாத இரவுகளை கழித்தேன்.

bhavani reddy
bhavani reddy

ஒரு நிலையில் வலியால் அழ ஆரம்பித்தேன் இடையில் எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தன ஓய்வெடுக்க எனக்கு விருப்பமில்லை அதனால் இந்த வலியுடன் வேலையை செய்துவிட்டு பின்னர் ஹைதராபாத் சென்றேன் தனது படப்பிடிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்ததனால் என்னை வீட்டில் இருப்பது போல் உணர வைத்தனர்.

bhavani reddy
bhavani reddy

அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன் நான் தினமும் என் பிசியோதெரபியை தொடர்ந்தேன் ஆனால் வகை மோசமாகிவிட்டது என்னால் என் வலது கையை தூக்க முடியவில்லை அது உடைந்தது போல் உணர்ந்தேன் அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது வலியால் நான் சத்தமாக கத்துவேன் இறுதியாக டாக்டர் சுகுமார் மற்றும் @asian.spine.hospital அவர்களால் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன் இப்பொழுது மிகவும் நன்றாக உணர்கிறேன் வழியில் இருந்து மீட்டர் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி எனக் கூறியுள்ளார் மேலும் தன்னை பார்த்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Comment